சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 243 எழுத துடிக்கும் என் மனம்” எழுத எழுத துளிர்க்குது எழுத்து என்னை மயக்குது எங்கெங்கோ இழுக்குது எதையெதையோ சொல்லுது பிறக்கும்போது அறியவில்லை பிறப்பின் நோக்கம் புரியவில்லை எங்கிருந்தோ ஓசையொன்று எனக்காக ஒலித்ததின்று கைவிரலின் நாட்டியத்தில் கவிதை நடனம் புரியுது தமிழன்னை பாடுகிறாள் தமிழ்மழையாய்ப் பொழிகிறாள் செந்தமிழின் வனத்தினுள்ளே தொலைந்துபோன மகிழ்வெனக்கு செம்மொழியின் அழகிலின்று செப்புகிறேன் தமிழ்க் கவிதை இலக்கணத்தை கற்காமல் இலக்கியத்துள் அடங்காமல் இதயத்துள் கண்ணதாசன் இறைக்கின்ற தமிழூற்று நானொன்றும் அறிஞனில்லை […]

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ எச்சம் “ அகழாய்வு கண்டெடுத்த அற்புத எச்சம் தகமையைக் கூறிடும் தமிழரின் வரலாறு பகம்மை வேண்டாம் பாரினில் பாரினில் எமக்கு சுகமாய் வாழ்வோம் சுதந்திரத் துடனே விட்டுக் கொடுப்பு வாழ்வில் வேண்டும் பட்டு அறிந்து பதற வேண்டாம் கட்டுக் கோப்பில் கொட்டும் முரசு திட்டம் போட்டுத் திடமாய் வாழ்வோம் ஏற்றம் உண்டு எச்சம் இல்லை போற்றும் பாரே புகழ்மாலை சூடி… கோசலா ஞானம்.

ஜெயா நடேசன்

சந்தம் சி்ந்தும் சந்திப்பு வாரம் -28.11.2023 கவி இலக்கம்-244 எச்சம் விலங்குகளின் எச்சம் மரங்களுக்கு உரமானதோ போராளிகளின் எச்சங்கள் புதை குழிகளில் தோண்ட தோண்ட எச்சங்களாக எடுக்கின்றனரே ஆதி கால ஆவணங்கள் மண்ணில் புதையுண்டனவே இன்று அடையாளச் சின்னங்களாக அகழ் ஆராச்சியில் எச்சங்களாக மீட்கின்றனரே எகிப்திலே புதைக்கப்பட்ட அரசர் அரசிகளின் உடல்கள் அழியாத ம்ம்மி உருவங்களின் எச்சங்களாக ஆய்வில் இடம் பெறுகின்றனவே மானிட எச்சம் பல வரலாறு கூறுமே மாவீர்ர்கள் எச்சம் காவியம் படைக்குமே வரலாறு படைக்கும் […]

வசந்தா ஜெகதீசன்

எச்சம்… வரையறை அற்றது வாழ்வின் எச்சம் வரைமுறை உடையது வாக்கிய எச்சம் நடைமுறை வாழ்வில் நாம் கண்ட எச்சம் நாளாந்தப் போரின் விழுமிய மிச்சம் துடிக்கும் உயிர்களும் துண்டித்த தலைகளும் வீழ்ந்தே மடிந்திட்ட மனிதத்தின் வதைகள் மலிந்தே போனதே மனிதத்தின் தகமை இழந்தே போனோம் எண்ணற்ற உயிர்கள் ஈடிணையற்ற இழப்பின் வலிமை ஏங்கிய தவித்திடும் உறவுகள் நிலமை எச்சமாய் மிஞ்சிய அவலத்தின் அனர்த்தம் இடரென வாட்டுதே மன அழுத்தத்தின் உச்சம் வெந்தே மடிந்திட்ட வீரரின் கனவு எச்சத்தின் […]

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_128 “எச்சம்” மனித புதை குளியின் எச்சம் அச்சத்தில் மக்கள் காணாமல் போனவர்கள் புதைகுளிக்குள் எச்சமா!! நாளை வருவான் என் மகன் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாய்க்கும் தந்தைக்கும் புதைந்திருக்கும் மனித எலும்புக் கூடுதான் மிச்சமாய் மிதக்குமா!! வெண்குடையுடன் வெள்ளை உடையுடன் சென்ற சாமாதான புறாக்கள் எல்லாம் எங்கே என கேட்டு கதறியழும் மனைவிக்கு மக்களுக்கு என்ன பதில் கிடைத்திடுமே!! விலங்குகளின் எச்சம் பறவைகளின் எச்சம் விலைவாசியில் உச்சம் உரத்திற்கு அதி உச்சம்!! நன்றி […]

Vajeetha Mohamed

எச்சம் கட்டிக் காத்த பண்பாடு காலத்தால் அழித்த வீண்பாடு மூத்தபெற்றோரின் கலைப்பாடு மூழியாச்சு போச்சு செயல்பாடு அறுத்தெறிந்த கடைசி எச்சம் துளிர்கமுடியாத தொல்பொ௫ள் தேடலில் மிச்சம் காய்ந்து போன வாழ்வியல் முறை கடந்துபோன புரட்சியே கறை பறவைகள்போடும் எச்சம் பசுமையைக் காத்திடும் ௨ச்சம் ஈர்விந்து சேர்ந்திடும் மஞ்சம் இறைபடைப்பின் ௨யிர்ப்பின் எச்சம் நவீனத்தின் வளர்ச்சியை ௨ற்று நோக்கு பழமைகள் ஊன்றிய மிச்சத்தின் போக்கு மானிட பிறப்பின் தொடர்க்கம் மந்தியின் பரம்பரை வால்தேய்ந்து டாவின்சின் பரிணாம வளர்சியின் விஞ்ஞான […]

சிவா சிவதர்சன்

[ வாரம் 244 ] “எச்சம்” பறவை பிராணிகளின் எச்சம் பசியதாவரபசளையாகலாம் பந்திகளில் பரிமாறும் உணவின் எச்சம் பயனின்றிவிரயமாகலாம் வீதிகளில் விதைக்கும் எச்சம் உடல்நல இடையூறுமாகலாம் பூமியில் வாழ்ந்த புண்ணியரின் எச்சம் பூதல வாழ்வில் உயர்வுதரலாம் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால்காட்டுவது பொய்யாமொழி தற்கால வாழ்வை உயர்த்தும் அக்கால சான்றோர் ஈந்த தியாக ஒளி தமிழர் வாழ்வுயர தம்முயிரீந்த மாவீரர்க்கு ஏற்றும் கார்த்திகை தீபஒளி ஒற்றுமையில்லாத்தமிழா நீ இனரீதியிலாவது ஒன்றுபட்டு முழங்கியொலி மறைக்கப்பட்டாலும் எஞ்சி நிற்கும் […]

சிவா சிவதர்சன்

[ வாரம் 244 ] “எச்சம்” பறவை பிராணிகளின் எச்சம் பசியதாவரபசளையாகலாம் பந்திகளில் பரிமாறும் உணவின் எச்சம் பயனின்றிவிரயமாகலாம் வீதிகளில் விதைக்கும் எச்சம் உடல்நல இடையூறுமாகலாம் பூமியில் வாழ்ந்த புண்ணியரின் எச்சம் பூதல வாழ்வில் உயர்வுதரலாம் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால்காட்டுவது பொய்யாமொழி தற்கால வாழ்வை உயர்த்தும் அக்கால சான்றோர் ஈந்த தியாக ஒளி தமிழர் வாழ்வுயர தம்முயிரீந்த மாவீரர்க்கு ஏற்றும் கார்த்திகை தீபஒளி ஒற்றுமையில்லாத்தமிழா நீ இனரீதியிலாவது ஒன்றுபட்டு முழங்கியொலி மறைக்கப்பட்டாலும் எஞ்சி நிற்கும் […]

ஜெயம் தங்கராஜா

சசிச எச்சம் களம் பலகண்டதொரு இனத்தின் எச்சம் தளர்ந்துவிடுமோ தடையுடைத்து அடையும் உச்சம் கனவது இன்னும் விழிகளில் மிச்சம் மனத்தீ அணைந்நுவிடும் அடையும் பட்சம் மைந்தராய் கிடைத்தாரே எமக்கு அருளென்று சிந்தினாரே குருதியை அதற்கும் பொருளுண்டு சிந்தையிலே நிறைந்தவர் இவர்போல் எவருண்டு உந்தனை வணங்கிடுவோம் தமிழ் கொண்டு சீவனை விட்டாலும் பாசபந்த சீவியம் தேவராய் நடமாடி காத்துநின்ற காவியம் சாவதற்கு துணிந்தவர்கள் துடித்துவிடும் ஆவியும் காவல்செய்தார் திசைகளெல்லாம் ஏம சாமமாகியும் பிறந்த மண்ணை மேன்மையாக்கிய சொந்தம் இறப்பை […]

பாலதேவகஜன்

எச்சத்து நிலையகற்றி உச்சத்தில் எமையிருந்த உலகே மெச்சும் மாபெரும் விடுதலை போரை வழிநடத்திய வீரத்தலைவா! வழிமேல் விழிவைத்து காத்து கிடக்கின்றோம் உனது வருகைக்காக. ஆசைகள் சுரந்த எச்சத்தில் பிறந்தவனல்ல நீ! விடுதலை சுரந்திட்ட வீர மறவனாய் எமக்காக பிறந்தவனே நீ! சேர சோழ பாண்டியரின் பரிணாம்மாய் பிறந்த பெரும் தலைவனே நீ! மழைபொழியும் கார்த்திகையில் பார்வதியின் வயிற்றினிலே துளிர்த்துவந்த நறுமுகை! ஈழத்தாய் மண்ணிலே மொட்டவிழ்ந்த நன்னாள் நமக்கெல்லாம் பொன்னாள். கட்டவிழந்த காட்டாற்று வெள்ளம் போல் வற்றாத நின் […]