கீத்தா பரமானந்தன்

மூண்ட தீ! அன்று அனுமன் இட்டதீ ஆண்டாண்டு காலமாய் தொடருந்தீ கானலாய் ஈழத்தைக் கங்குலில் புதைக்குதே! ஆணவம் அகந்தையின் அடங்காப் பசியினால் தேனெனும் மனிதத்தை தினமெலாம் கருக்குது! பூண்டோடு தமிழரைப் புதைத்திடும் நோக்குடன் மூட்டிய தீயதாய் மூசியே எரியுது! முடிவுரை இன்றியே முத்திரை பதிக்குது நாட்டிய இனவெறி நங்கூரம் பாச்சுது! மனிதத்தைத் தொலைத்திட்ட மாக்களின் கரத்திடை புனிதமாம் ஈழம் பொசுங்கித் துடிக்குது! பொறுப்புடை உலகமும் போக்கற்று நிற்குது! கீத்தா பரமானந்தன்29-05-23

ஜெயம் தங்கராஜா

சசிச மூண்ட தீ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மூண்ட நெருப்பு நெடுங்காலம் ஆகிடினும் நினைவைவிட்டு  நீங்காது சிந்திய இரத்தமும் சீவன் துளிகளும் கண்முண்ணே நிழலாடுகின்றது கனவையும் நிரப்புகின்றது வழிகளில் வலிகள் விடாமல் துரத்தியது விழிகளில் ஈரம் வாழ்வும் நொருங்கியது காலனோ அருகாமையில் கூப்பிடும் தூரத்தில் மரணங்கள் மலிவானது மூச்சு தினறியது கோவில் தெய்வங்கள் கைவிட்டு விட்டன மனிதர் உலகம் மவுனம் காத்தது நந்திக்கடலில் மூழ்கி நீதி மூர்ச்சையானது ஏனென்று கேட்காதே எட்டியே எட்டுத்திக்கும் சோதனைகள் மொத்தமாக சாபமான பொழுதுகள் […]

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-13 30-05-2023 மூண்ட தீ மூண்ட தீ மீண்டெள முத்தாக பலர் யாழ் நூல் நிலையத்திற்கு. வேண்டியதை நாம் கற்க எமக்கோர் பாமுகத்தோர் நீண்டதை இணையத்தில் எட்டுத்திக்கில் உள்ளோருடன் கற்றுப் பயனுற்று மீண்டதை நாமெடுத்து தூண்டுவோம், எம் எதிர்கால சந்ததிக்கு. நீண்டது முல்லை போல் படர்ந்து வெளிவந்து துலங்க ஆண்டது மறுபடியும் எம் தமிழினமாய் விளங்க. மீண்டொரு தீ எம் இனமொழி அழிக்க மூண்டாலென்ன […]

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023 கவிதை இலக்கம்-224 மூண்ட தீ ———————- ஒரு குச்சி மூண்டதே பற்றி எரிந்து அழித்ததே தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே காற்றாலே உன்னை அணைக்கலாமே நீ காற்றாலே சுடர் விட்டும் எரிவாயே உன் தலையில் தீ மூட்டினால் நிமிர்ந்து நின்று ஒளிர்வாயே தீ சுடும் என்று அம்மா சொல்லி தந்தாள் தீ சுடுமா என தொட்டுப் பார்க்க நினைத்தேனே காட்டு தீ மூண்டதாலே மரங்கள் விலங்குகள் அளிக்க வைப்பாயே தீ […]

செ.தெய்வேந்திரமூர்த்தி

மூண்டதீ “”””””””” எண்சீர் விருத்தம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் என்னுளே மூண்டதீக்(கு) எனக்கொரு காரணம் எவரையும் மதித்திடாச் செருக்கெனும் தீயதாம் உன்னுளே மூண்டதீக்(கு) உனக்கொரு காரணம் உன்மனம் அறியுமே உள்ளதை உரையுமே அன்பிலார் வைத்ததீ அழிக்குமே உலகினை ஆசையால் மூண்டதீ ஆணவத் தெழுந்ததீ இன்னலென் றேங்குவார் இன்பமும் தொலைக்குமே ஈனமாம் தீயதன் இடுக்கினுள் வீழ்த்தியே! மூண்டதே தீயிங்கு முழுவதும் அழிக்குதே மூச்சினுள் தங்கியே முயற்சியைத் தடுக்குதே தூண்டுதே துக்கத்தை தூக்கமும் […]

Vajeetha Mohamed

மூண்ட தீ ௨யிரற்ற மண்ணறை ௨டலம் ௨றவின்றி மூண்ட அவலம் பரம்பரை மார்க்க கடமை பரிபோனதே அதிகார இழிமை கொரோனா வந்தது புதுமை நெந்தணல் படுக்கையில் எரித்தனர் எங்களை சிறுமை நீதிதேடி ஓடினோம் புதைத்துவிடு வெள்ளைத்துணியோடு புலம்பினோம் மூண்டதீ நிறுத்திவிடு சோரம் போகும் தலைமையும் சிறுபான்மையை அழிக்கும் கடமையும் அடாவடித்தனம் கொண்ட அரசிடம் அழுது மண்டியிட்டது மனிதம் கைகள் விலங்கிட்டு குரல்வளை நசுக்கப்பட்டோம் கண்ணீரைத் கொட்டிக்கொண்டு இ௫கரம் ஏந்திநின்றோம் ஈழத்தில் கொரோனா ௨டலங்களை நல்லடக்கம் செய்ய ஓரிடம்கொடுக்க […]

சிவா சிவதர்சன்

[ சந்தம் சிந்தும் சந்திப்பு இல.224 ] “மூண்ட தீ” முள்ளிவாய்க்கால் பேரவலம் இன்னும் முழுமையாய் ஓயவில்லை இனப்பகையால் மூண்ட தீயின்சினம் ஆறப்போவதுமில்லை மூண்டபோர் மௌனித்து தசாப்தம்ஒன்றரை கூட ஆகவில்லை வஞ்சத்தின் விழுப்புண்களை மறப்பது வீரமறவர் பண்புமில்லை குழந்தைகள் பால்மணம் மாறா பாலச்சந்திரன்கள்! பல்லாயிரக்கணக்கில் பரிவுசிறிதுமின்றி பலியாக்கி மகிழ்ந்தாய்! உனைப்படைத்த புத்தராலும் பாவமன்னிப்பில்லாப் பாவியானாய்! நேர்க்கணக்கில் தலை கொய்தாலன்றி ஆறாது மறத்தமிழனிடம் மூண்ட தீ! வாய்ப்புக்ளை உருவாக்கி வளங்களைப்பெருக்கி குறிதப்பாமலடிபவன் தமிழன்! எமையீன்ற ஈழத்தமிழ் அன்னையே ! […]

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23 நகுலவதி தில்லைதேவன். மூண்ட தீ கார்த்திகையில் அண்ணாமலையில் அண்டாவில் மூண்டிய 🔥 பத்தகோடிகளை பரவசப்படுத்துமே. சிறிலங்காவில் மூண்டது தீ 🔥 சீதையிட்ட சாபமே தொடருது தீவைப்புக்களே. தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே யாழில் 🔥🔥🔥 பரவிய தீ தியேட்டரில் நிறைந்த மக்கள் வெள்ளமே. என்பத்திமூன்றில் 🔥 தீ எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே . அடி தடி கடைகள் […]

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023 கவி இலக்கம்-224 மூண்ட தீ ———————- ஒரு குச்சி தீ மூண்டதே பற்றி எரிந்து அழித்ததே தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே காற்றாலே உன்னை அணைக்கலாமே நீ காற்றாலே சுடர் விட்டும் எரிவாயே உன் தலையில் தீ மூட்டினால் நிமிர்ந்து நின்று ஒளிர்வாயே தீ சுடும் என்று அம்மா சொல்லி தந்தாள் தீ சுடுமா என தொட்டுப் பார்க்க நினைத்தேனே காட்டுத் தீ மூண்டதாலே மரங்கள் விலங்குகள் அளிக்க வைப்பாயே […]

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 110 மூண்ட தீ யாழ் நூலகம் அனைத்துலக அளவில் அதிகம் பேசப்பட்டதே ஆர்வலர்களின் அயராத உழைப்பின் உன்னதம் ஆவணப் காப்பகமாக மிடுக்குடன் மிளிர்ந்தது புத்தூர் செல்லப்பாவின் எண்ணத்தில் வண்ணமாய் தன் இல்லமதில் சில நூல்களுடன் நடாத்தி வந்த நூல் நிலையம் விரிவுபடுத்தும்நோக்கில் செல்லப்பா அவர்களும் பிரமுகர்கள் இணைந்தே வாடகைக்கு பெற்ற சிறிய அறையொன்றில் நூலகம் இயங்கியதே செல்லப்பாவின் சிந்தனையே அத்திவாரம் கட்டடமாக எழுந்தது நூறு நூல்களுடன் இயங்க தொடங்கிய அறிவாலயம் 1936 ஆண்டினிலே யாழ் […]