கமலா ஜெயபாலன்

கவி அழகு அழகு அழகு கவியழகு அமிர்தம் சிந்தும் மதியழகு உள்ளம் நினைக்கும் வடிவமது உன்னதமான உலகமது வண்ணம் சிந்தும் வர்த்தைகளால் வரைந்து வடிக்கும் ஓவியமே கண்ணில் தோன்றும் கவர்ச்சிதனை கயல்மீன் என்றே கவசொல்லும் மண்ணில் தோன்றும் மகிமையுமே மனதில் தோன்றும் மகிழ்வாக எண்ணில் கவிதை வரிகளெல்லாம இயற்கை அழகோ அழகன்றோ கமலா ஜெயபாலன்

Jeya Nadesan

கவிதை நேரம் கவியழகு —————- எனக்கு நானே உள் அழகு உனக்கு நீயே முக அழகு என் கிறுக்கல் கவி பேரழகு எதுகை மோனை கவிகள் ஓசை பேச்சழகு கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும் கம்பனின் கவிகள் கலையழகு பொய்யான கவி வரிகள் புனைந்த பாரதி புதுமை கவியழகு இயற்கை வனப்பில் கவிஞனின் கவி வரிகள் பொய் அழகு பெண்ணுக்கு நெற்றியில் திலகம் வசீகர அழகு வலது கை அழகாக கவி வடித்த பெண்ணுக்கு யப்பான் […]

மனோகரி ஜெகதீஸ்வரன்

கவியழகு கற்பனையே உயிர்மூச்சு கவிக்கெனவே ஆச்சு கவியழகு தருமதன் ஒப்பனை கருவும் காணுமதனால் விற்பனை பொய்மைப் புனைவும் செய்யும் நெய்யும் கவிதைக் கழகு தொய்வு அறுத்து நுகர எய்வர் இதனைக் கவிஞர் எதுகை மோனைச் சந்தம் உவமை தற்குறிப்பேற்றவணிவ கைப் பந்தம் கவியது கொள்ளின் சொந்தம் காமுற்று மனமருந்த முந்தும் காவிடக் கரங்கள் தாங்கும் கவியும் எங்கும் சிந்தும் சொக்க வைக்கும் சொல்லாட்சி கக்கி நிற்பதும் கவிக்கழகு நக்கி நயக்கவுமது இலகு சிக்கி நிற்குமதில் உலகு கவியழகு […]

வஜிதா முஹம்மட்

கவி அழகு க௫வெடுத்தேன் சு௫க்கி கவி கொடுதேன் செதுக்கி கவி அழகு சொல்லிதழ் மடித்தேன் இறுக்கி சொர்கும் இனிமை கவி தொடக்கி கவி அழகு தமிழ் வேர் ஆழமதில் தாய்மொழியின் ஆனந்தமிதில் கவி அழகு எதுகை மோனை விதிவழி எடுப்பும் தொடுப்பும் எழுநெறி கவி அழகு கவர்ச்சி ஈர்ப்பு முழுமை எழில் கற்பனை பொழிவு காலம் ௨வமை இதன் முகில் கவி அழகு மெல்லினம் துள்ளி விளையாடும் இடையினம் ஓடி ௨றவாடும் கவி அழகு வல்லினம் வந்து […]

ராணி சம்பந்தர்

28.01.25 ஆக்கம் 174 கவி அழகு எழுத எழுத எழுதிடத் தூண்டும் இனிமையில் உழுத சொற்கள் உவமையோடு ஊன்றிடும் மகிமையில் தோன்றிடும் பிரமிப்பு வழியும் மனதில் விழியின் உணர்வில் மாறி மாறித் தூண்டலிடும் பொய்யும் மெய்யும் கரைந்து நின்றிடும் வர்ணிப்பு மறைந்து தேயும் மாபெரும் கனவுப் பெட்டகங்களில் உயிர் கொடுக்கும் பேனா முனை தாளில் பரிதவிப்பு பரந்து விரிந்த பல வர்ணக் காட்சி உருவாக உறைந்து கருவாக வளர்ந்து உவமை ஒப்பீடு , எதிர்முனையில் கை கால் […]

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_176 “கவி அழகு” கண்ணுக்கு மையழகு கவிக்கு பொய்யழகு பெண்ணுக்கு பொன்னழகு விண்ணுக்கு விண்மீன்னழகு! கவிக்கு கற்பனையழகு காதோரம் கேட்கும் திறனாய்வழகு புதைந்திருக்கும் புதிர்களை சந்தத்தில் சிந்தி சங்கதி பேசும் பேனா முனையழகு! கவிஞனுக்கு பேனா முனை ஆயுதம் ஆராய்ந்து பதம் பாத்து சிந்தித்து செயலாற்றி பார்பவரை காதல் கொள்ளும் கவி அழகு! உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்த அம்மா நீ அழகு! முதலில் பேசி பழகியது அப்பா முரன்பட்டு எழுதி […]

ஜெயம் தங்கராஜா

சசிச கவி அழகு கருவொன்றை கவி புனைய எடுத்து உருவாக்கி வார்த்தைகளை சந்தங்களைத் தொடுத்து உளத்தோடு பேசுகின்ற பாவொன்றின் வடிப்பு உலகத்தில் அதுவன்றோ அழகான படைப்பு அற்புதமாய் வரியமைத்து மொழி விளையாட்டு சொற்றொடரில் கொப்பளிக்கும் கற்பனையின் கூட்டு கவியெல்லாம் அழகாகும் புதுமைகளை சிந்திவிட செவிநுழைந்து நெஞ்சைத்தொடும் வாசிப்பதை கேட்டுவிட பாரதியார் கவிகளெல்லாம் கொண்டதென்ன எழில் காரணம் அவருக்கு கவியெழுதுவதே தொழில் வனப்பான கவிதைகளும் சிந்தையிலே தேங்கும் கணக்கில்லா இரசிகர்களை ஈர்ப்பாலே உள்வாங்கும் ஜெயம் 24-01-2025