1-1

இவ்வாரத் கவித் தலைப்பு

வசந்தா ஜெகதீசன்

தடமது பதித்தெழும் தனித்துவமே… அணியெனத் திரண்டெழு ஆளுமையில் அனுதினம் படைப்புக்கள் வீரியமாய் புதிதென உருவாக்கம் பூத்தெழுமே இளையோர் இணைவில் தொகுப்புக்களும் இன்றியமையாத் தேடலின் வனப்புகளும் சாலச்சிறந்த சான்றுகளும் புலம்பெயர் எழுத்தாளர் திங்களின் தனித்துவமும் இருபத்தியேழாம் அகவையிலே எத்தனை வளர்ச்சியின் சரிதமுண்டு ஏற்றத்தின் திறவுகோல் பாமுகமாய் எழுத்தே மொழியின் இன்னுயிர்ப்பாய் உழுதிடும் ஏர்போல் நாற்றூன்றி உருவாக்கத்தின் திறனை தினமாக்கி விழுதிடும் சேவை ஆற்றுகின்ற வேராய் நிமிர்ந்திட்ட கோபுரமே பல்திறன் வித்தகம் பாதை செப்பும் பாமுக பணியின் தனித்துவமே இலக்கில் ஓன்றிடும் எழுத்தாற்றல் இளையோர் நிகழ்வின் பேராற்றல் மரபுக்கவியும் மாண்புபோற்றும் திறன்படும் தேர்ச்சி தொகுப்பாளர் அறிவின் விருத்தியின் ஊடகமாய் தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகையுடனே தடமது பதித்துயர் தனித்துவமே தடைகளை உடைத்துயர் சரித்திரமே இலண்டன் தமிழ் வானொலி சரிதமிது குன்றில் விளக்கென குவலயத்தில் என்றும் ஒளிர்வாய் பாமுகமாய் உருவாக்கத் திறனின் ஒளிமுகமாய். நன்றி மிக்க நன்றி

மேலும் வாசிக்க