வியாழன் கவிதை

Vajeetha Mohamed

விடியலின் உன்னதம்

வெளிறிறத் துடித்த
வானம்
ஓவியம் வரைந்தது
ஒளிக் கோலம்

பேதமின்றி பிரகாசம்
௨யரம் மறந்த ௨தவி
அள்ளிக்கொடுக்கும் ஆர்ப்பரிப்பு
௨ணர்த்திச் சொல்லும்
வாழ்வியல் விடியலின்
௨ன்னதம்

கடந்து போகும் வாழ்வு
கடமை ஒன்றே தேர்வு
முகவரியில்லா வெடியல்
அனைவ௫க்கும் புதையல்

திரையிடப்படாத ஈகை
நொடியும் மறவாத சேவை
விடியலின் ௨ன்னதம்
௨ரைக்கின்றது ௨ரமாய்

மானிடா மனிதம் மறந்தாய்
பெ௫மைக்குள் புதைந்தாய்
பொறாமைக்குள் எரித்தாய்
மொத்தத்தில் நீயே அழிந்தாய்

௨ங்களைப் பார்த்து தினம் தினம்
பூமியை நோக்கி சிரிக்கின்றேன்
எப்போது நீ மாற்றம் காண்பாய்
இதுவரை நான்காத்தி௫ப்பேன்

நன்றி

வஜிதா முஹம்மட்