வியாழன் கவிதை

Selvi Nithianandan

பொங்கும் உளமே
தங்கும் தையே (598)
உளமும் உவகையில் மலர
ஊரும் தூக்கமின்றி உலவ
உறவுகளும் ஒன்றாய் சேர
உதித்திடுமே தைமகளும் கூட

உதயத்தில் அகமும் நிறைந்திட
உழவரின் கதிரும் உள்பொருளாய்
உணவு படையல் உபசரிப்பும்
உச்சம் தலைவரை ஆட்கொள்ளும்

புலம்பெயர் மண்ணில் பலமாற்றம்
புதுப்புது எண்ணமும் பரிமாற்றம்
பொங்கிடும் உள்ளமும் ஏமாற்றம்
பொசுங்கியே போகுது தையாய்