வியாழன் கவிதை

Selvi Nithianandan

எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே (573)

வித்தாய் முளைத்தாய்
விருட்சமாய் வளர்வாகும்
வீரியமே மூச்சாய்
வையத்துள் வாழ்வாகும்

எழுத்தின் உருவம்
ஏடாய் சிறக்கும்
எண்ணின் வடிவம்
எழுச்சியாய் பிறக்கும்

தரணியில் சிறப்பு
தடைகள் உடைப்பாகும்
தமிழின் பிறப்பு
தரமாய் உயர்வாகும்

எழுத்தின் வித்தே
ஏராளாள மொழியாகும்
ஏகமாய் படர்ந்து
ஏற்றமாய் வேரூன்றுமே.