வியாழன் கவிதை

Selvi Nithianandan

எழுத்தாளர் வாரமே (572)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடும்
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாம்

எண்ணச் சிந்தனை
ஏடாய் பதியட்டும்
ஏற்றம் கண்டும்
எழுத்தாய் விரியட்டும்

இருபத்தாறின் பதியம்
இலக்கின் காவியம்
இடைவிடா இணக்கம்
இலட்சிய சிகரம்

எண்ணும் வலிகளும்
ஏக்கத்தின் நினைவுகள்
ஏற்றத் தாழ்வு இல்லா
ஏகபோகமாய் சிறகடுக்குமே.