சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

அன்னையின் மூன்று ஆண்டா

காலச்சக்கரம் வேகமாய் சுழலுது
கனதியாய் இதயமும் நோவுது
காலமும் மூன்றாய் கடக்குது
கண்ணீரும் கலங்கியே வடியுது

வாரம் ஒருபேச்சு காதில்கேட்கும்
வந்த செய்தி வாட்டியே வதைக்கும்
வதனமும் எப்போதும் மலர்ந்தேநிற்க்கும்
வனப்பான உம்முருவம் வந்துபோகும்

கண்ணாடி அணிந்தும் பார்க்கவில்லை
பின்னாடி யாரையும் பேசியதில்லை
பத்திரிகை படிக்காமல் இருப்பதில்லை
பசியென்று வாய்திறந்தும் கேட்டதில்லை

பத்திரமாய் சொல்லும் வார்த்தைகூட
இப்போ ஒலிக்கவில்லையே