சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

கனவு மெய்ப்படவேண்டும்

பாசமாய் உறவுகள் நேசித்திட
பார்போற்ற என்றும் வாழ்ந்திட
பிளவுபடா வேராய் இருந்திட
பின்னிப் பினைந்து சேர்ந்திடனும்

உள்ளதைக் கொண்டு சிறந்திட
உவகையாய் என்றும் நிலைத்திட
உலகிலே வறுமை ஒழிந்திட
உருட்டும் பிரட்டும் அழிந்திடனும்

நாடுகளிடை போட்டி இல்லாது
நா நயத்துடன் என்றும் சிறந்து
நல்லறிவு நானும் உணர்ந்து
நற்பெயருடன் வாழல் வேண்டும்

செல்வி நித்தியானந்தன்