புழுதிவாரி எழும் மண்வாசம்
புழுதிவாரி எழும் மண்வாசம்
புவனத்தில் வந்திடுமே தனிவாசம்
இருண்டு விடும் விண்ணும்
முழங்கி விடும் மேகமும்
ஏன் வருவாய் நீயும்
என்ன செவ்வாய் சொல்லு
மாமழையாய் வந்திடுவேன் மண்ணில்
மானிடமும் மழையாலே நனையும்
மனங்களும் மகிழ்ச்சியாலே துள்ளும்
மண்ணும் மனமுவந்து போகும்
ஈரமண்ணின் வாசம் ஈர்த்திடுமே உயிர்கள்
ஈரடிகவி போல இணைந்திடுமே பலவும்
ஈடு கொடுத்து பலஉயிரும் வாழுதே
ஈற்றில் பறவை கூட ஒருநாள் வருகுதே
ஏன் பறந்து வந்தாய் நீயும்
எதற்க்கு வந்தாய் சொல்லு
ஈசலாய் உயிர்பெற்று வாழுகிறேன்நானே
வந்த நாளே இறந்துடுவேன் தானே
சேவல் பேடு இணைந்திடுமே வாழ்வு
சேவகனாய் காவல் அரண்கூடு
சேறு சகதி அழைந்துதானே செல்வாய்
சேதி என்ன வென்று சொல்வாய்
சேற்றில் உள்ள பூச்சி புழு உண்ண
சேகரிப்பில் இருப்பதெல்லாம் வந்திடுமேமெல்ல
குவலயத்தில் புழுதிவாரி மண்வாசம்கூட
குறுங்கவியும் இப்போ பாடலாக மாறும்