வலி
வலிகள் பலவாய்
வாழ்வினில் வந்திடும்
வடுக்கள் தாங்கியும்
வந்தும் படிந்திடும்
மரணத்தின் வலியும்
மனதை கொன்றிடும்
மாறிடா வலியும்
மருந்தாய் சென்றிடும்
பிரசவ வலியும்
பிழைத்து வென்றிடும்
பிள்ளைகள் வலியும்
பிரளயமாய் முடிந்திடும்
வலித்திடும் பட்டமும்
வனப்பாய் உயன்றிடும்
வழுவினை உணர்ந்து
வாஞ்சையாய் உயரவே.
செல்வி நித்தியானந்தன்