சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

வலி
வலிகள் பலவாய்
வாழ்வினில் வந்திடும்
வடுக்கள் தாங்கியும்
வந்தும் படிந்திடும்

மரணத்தின் வலியும்
மனதை கொன்றிடும்
மாறிடா வலியும்
மருந்தாய் சென்றிடும்

பிரசவ வலியும்
பிழைத்து வென்றிடும்
பிள்ளைகள் வலியும்
பிரளயமாய் முடிந்திடும்

வலித்திடும் பட்டமும்
வனப்பாய் உயன்றிடும்
வழுவினை உணர்ந்து
வாஞ்சையாய் உயரவே.

செல்வி நித்தியானந்தன்