சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

காலத்தின் குற்றமா

காலத்தின் கோலம்
ஞாலத்தில் மாற்றம்
ஆலமும் நிறைத்து
பாலமும் உடைத்து

உயிர்களின் இறப்பு
உடமையும் இழப்பு
உடல்கள் சிதைப்பு
உண்மையும் மறைப்பு

மண்ணுக்குள் வீடுகள்
மக்களவை ஆறுதல்கள்
மனிதத்தின் மீட்புகள்
மனைக்கு முடிவுகள்

கண்கலங்கும்சடலங்கள்
கதறுகின்ற உறவுகள்
தோண்டதோண்டஉடலம்
தேற்றத்தான் முடியுமா.

செல்வி நித்தியானந்தன்