சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

அத்திவாரம்

அத்திவாரம்பலமானால்
ஆயூளும் மகிழ்வாகும்
ஆனந்த வாழ்வானால்
அகிலமே சிறப்பாகும்

அன்னன தந்தை
அற்புத வரமாகும்
அள்ளவும் வற்றாத
அமுத சுரபியாகும்

இல்லமே அடிக்கல்லின்
அத்திவார முதலாகும்
இணைவே வாழ்வின்
ஆரம்ப படியாகும்

இறுகிய வாழ்வும்
இளகிய மனமும்
இன்பமாய் வாழ்ந்திட
இனித்திடும் அடிக்கலே

செல்வி நித்தியானந்தன்