வியாழன் கவிதை

pon.tharma

கவிதை இலக்கம் -533
புழுதி வாரி எழும் மண்வாசம் .

சோழகக் காற்றது சுற்றி அடிக்க .
சுமை கொண்ட கிளைகளும் சுழன்றுமே முறிய .
கூடிய கூட்டமோ கூழுண்டு மகிழ .
தேடியே அண்டாவைத் தேர்ந்துமே எடுக்க.

ஆச்சியும் மகளும் ;அடுக்களை உபயம்.
அண்டாவை நிரப்ப ,ஆறு உமல் ,அசைவம் .
துடிக்கிற நண்டுகளைச் ,சுழற்றி ,ஒரு அடிப்பு .
தொங்கிடும் தலைகளை ,நறுக்கி ஒரு வெட்டு .

அவிகின்ற கூழ் ,அது ,அக்கம் ,பக்கம் எல்லாம் ,கம கமப்பு.
அடுத்தவர் வாசலுக்கும் ,அது சென்று ,வரவழைப்பு .
குடிக்கின்ற கும்பலும் ,கூடி நின்று ,பரபரப்பு .
கோலிய ,பலாவிலையால் ,கூழுமோ ,அள்ளிக் குடிப்பு.

அடித்திடும் காற்று ,அதனால் ,அங்கமெல்லாம் ,புழுதி ஒட்டிப்,பிசுபிசுப்பு .
குடித்திடும் கூழ் சுவையை ,மறைத்திடும் ,புழுதி வாரி எழும் மண் வாசம் .
பொன்.தர்மா