சந்தம் சிந்தும் சந்திப்பு
“ நிட்சயதார்த்தம்”
பிள்ளைவரம் என்பது பேற்றின் வரமாகும்
அள்ளி அணைத்து அமுதூட்டி அரவணைத்து
பள்ளிக்கு அனுப்பிப் பட்டம் பெறவைத்து
உள்ளக் குதூகலம் உணர்வினில் பொங்க
இருவீட்டார் ஒன்றிணைந்தும் இனித்திடக் கூடிமகிழ்ந்து
திருமண பந்தத்தை தித்திப்பாய் நிகழ்த்த
திருநாள் குறித்து பழத்தட்டு மாறி
இருவீட்டார் நிச்சயதார்த் த்த்தை நிகழ்த்துவர்…
கோசலா ஞானம்.