வியாழன் கவிதை

Kavikco Parama Visvalingam

புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம்

காற்றலை ஞானம் ஆற்;றுப்பிர வாகம்
கடும் தவத்தாலே ஏற்றிய தீபம்
லண்டன்தமிழ் வானொலி
பாமுகமாய் காணொளி
அகவை இருபத்தாறிலே
ஆர்ப்பரிக்கும் காற்றலை.

லண்டன் தமிழ் வானொலிக்கு பிறந்த நாள்
தொண்டு செய்யும் எண்ணமது வளர்ந்த நாள்
என்றும் எங்கும் இளையவர்கள் நிறைந்தநாள்
இயலாமை எனும் எண்ணம் மறைந்தநாள்.

இளையவர்க்காய் எடுத்து வைத்தோம் பல அடி – சிறுவர்
எழுத்தாளர் மாதமெனும் திருவடி
ஆனி மாதம் முப்பது நாள் திருப்பணி – அது
புலம்பெயர் தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்

ஆறுவழி தானமைக்கும் ஓடிப் பாரு
நூறு வழி தான் திறக்கும் தேடிப் பாரு
ஊற்றுமுகம் உனக்குள்ளே உற்றுப் பாரு – இது
பாமுகப் பயணம் பலர் இங்கு உதயம்.

பெஸ்ற் ஓடியோ கலையகத்தாருக்கெம் வாழ்த்துக்கள்!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்https://www.youtube.com/watch?v=7ZEgA0HJgOg