கவிதை நேரம்-18.01.2024
கவிதை இலக்கம்-1799
பொங்கும் உளமே
தங்கும் தையே
———————————–
தையே நீ வந்தாய் தமிழாக வந்தாய்
மெய்யெலாம் அழகு தங்கும் தையே
தென்றலாய் வந்தாய் திங்களாய் வந்தாய்
பொங்கலென்று வந்து மனம் பொங்க வைத்தாய்
புதுப்பானை வைத்து புதுச் சட்டை அணிய வைத்தாய்
மங்கலங்கள் முக்கனிகள் படைக்க வைத்தாய்
சங்கை நாம் செய்தோம் தமிழே நீ வருவாய்
எங்கும் உன் சிறப்பு பாரினிலே இனியவளே
பொங்கும் உளமே நிறைய வருவாய்
நின் வழியில் நிற்கும் நிழல் மரங்கள்
பொன் மலர்கள் மலர் தூவி வரவேற்க
மண் எல்லாம் தங்கும் தை மகளே வந்தாய்
தைப் பாவையாக வந்து தமிழர் மனம் குளிர
சுதந்திர காற்று சுகந்தமாய் சுவாசிக்க
உன் வரவு பார்த்து கண் விழித்து நின்றோம்
தைப் பாவையாய் வந்தாய் செல்வங்கள் பெருகட்டும்
அன்புள்ளங்கள் பகிர்ந்து பொங்கும் தையாகட்டும்