வியாழன் கவிதை

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-22.06.23
இலக்கம்-1708
அகதி நாம் பெற்ற வரமா
———————————–
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
எவரளித்த மாற்றத்தினால்
நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம்
போர் தந்த சூழலிலே இன்னலோடு ஓடி வந்தோம்
அகதி என்னும் போர்வையிலே
அத்தனையும் இழந்து வந்தோம்
அயல் நாடுகளில் அடைக்கலம் பெற்று
உயிர் பிழைத்து வாழ் அகதிகளாக
நாம் பெற்ற வரமென்று தங்கி விட்டோம்
தஞ்சம் என்று ஓடி வந்த எமக்கு
வஞ்சம் இல்லாமல் வரவேற்ற நாடுகள் பல
உணவு உடை உறையுள் தந்து
ஆதரித்து அணைத்த நாடுகள்
வசதியாக வாழ்ந்த எம் இனம்
வாழ வழியின்றி வகையற்று தடுமாறி
அகதி என பட்டமதில் ஏற்று வாழ்கின்றோம்
பல்லாண்டு காலம் இங்கு வாழ வேண்டுமென
நாம் பெற்ற வரமே இறைவன் செயலே