வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-08.06.2023
கவி இலக்கம்-1702
எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே
——————————–
எண்ணும் எழுத்தும் முத்தென வளரும்
இவை இரண்டும் கண்ணென தகும்
எழுத்திலிருந்து மலர்ந்ததே தமிழே
அன்னைத் தமிழை எழுத்தறித்தவன் இறைவனே
அன்பும் பண்பும் படிக்க வைத்த தமிழே
பலரை உயர் நிலைக்கு ஏற்றிடுமே
உலகம் முழுவதும் பூத்தெழும் தமிழே
மண்ணில் விழுந்தாய் வித்தாய் முளைத்தாய்
தனி மரமாக பாரெங்கும் பரந்து செழித்தாய்
எம் விளை நிலமாகி பரவி உயர்ந்தாய்
எங்கும் ஜொலிப்பாய் இனிய கன்னித் தமிழே
தாயின் கருவறையில் முதலில் கேட்ட தமிழே
மழலை நிலையில் வாயாற பேசிய தமிழே
ஆசான் கையில் எழுத்தின் வித்தான தமிழே
கவிஞனாக வடிவமைக்க வரி தந்த தமிழே
எழுவாய் உயர்வாய் உலகம் சிறக்க
வாழ்வாய் நிலைப்பாய் எம் இன்பத் தமிழே