வியாழன் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.02.2022
கவி இலக்கம்-161
மனித வாழ்க்கை
—————————-
உயிர் கொண்ட பூமி
உதிரத்தால் தோய்கிறது
இதயம் கசிந்து கனக்கிறது
உயிர் நிலையம் துடிக்கிறது
கொடையென தந்த இறைவன்
காலமும் வந்து ஆட்டி படைகக்கிறது
ஆல்போல் தழைத்து
அருகுபோல் வேரோடி
அவனியயில் வாழ்வதற்கு
போராடியே வென்றிடுவோம்
கட்டுப்பாடுகளை கடைப் பிடிப்போம்
வளமாக்கும் இயற்கைதனை
வாழ்வெல்லாம் பேணிடுவோம்
மகிழ்விக்கும் நம் வாழ்வினை
சிறப்போடு ஓட்ட பழகிடுவோம்
சிந்தித்து செயலாற்றுவோம்
சீரான வாழ்க்கை அமைத்து
சிறப்புடனே வாழப் பழகிடுவோம்