சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி -01.02.2022
கவி இலக்கம்-1451
இளையோர் வாழ்வில்
——————————
புதியதோர் உலகம் செய்வோம்
தமிழின் பெருமைகளை
தரணியில் எடுத்து சொல்வோம்
கல்வி என்னும் படகினிலே
கவனமாய் அறிவுதனை வளர்த்திடுவோம்
வீடுகளில் அம்மா அப்பாவுடன் கதைத்து
தமிழ்மொழியை மறவாது கற்றிடுவோம்
நன்னெறி வழி முறைகளை
நலமே பெற்று நல்வழி நடந்திடுவோம்
அறிவு எனும் பசிக்கு உணவு தந்த
ஆசான்களை போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
இலட்சியப் பாதையில் முன்னேற்றம் காண
இலக்கணமாய் வாழ்ந்து புகழ் சேர்த்திடுவோம்