சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.01.2022
கவி இலக்கம்-158
பரவசம்
————-
அதிகாலை பூபாளம் புலர்ந்தது
கதிரவன் ஒளி மிளிர்ந்தது
அண்டவெள நட்சத்திரங்கள் மின்னி மறைந்தது
பூக்களெல்லாம் இதழ் அகல விரித்தது
தேனுண்ண வண்டுகள் ரீங்காரம் இசைத்தது
பெண்கள் பூப் பறித்து மாலையாகி அணிந்தது
கண்கள் நிறைந்த காட்சிகள் மனதிற்கு பரவசமாகியது
பாமுகத்தில் நிகழ்வுகள் நிறைந்தது
பாமுக பூக்கள் கவிதையில் முகங்கள் மலர்ந்தது
இளையோர் அரும்புகளில் மொழிகள் இனித்தது
ஊக்கமும் ஆக்கமும் பாட்டும் பரவசம் ஊட்டியது
புலம்பெயர் நாட்டில் வெண்பனிப் பூக்கள் நிறைந்தது
பொங்கலும் பொங்கி மனங்களும் பொங்கி மலர்ந்து
பெண்களின் ஆட்டமும் பாட்டமும் அழகானது
மக்களும் பெற்றோரும் பார்த்து பரவசமானது