சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுகக் கவி-5.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1447
மலரட்டும் நம் நாடு
————————-
மண் வளமும் நீர் வளமும்
இயல் வளமும் இசை வளமும்
கலை வளமும் பண்பாட்டு வளமும்
கொண்ட நாடே எம் தாய் நாடு
தொன்மை மிகு தமிழ் மொழியில்
புகழ் பெற்று வாழ்ந்த எம் மூத்தோர்
மங்காப் புகழ் பெற்ற தமிழையும்
கலைகள் அத்தனையும் வளர்த்தனரே
பண்பாட்டு விழுமியங்கள் பலதை
பண்பாடாய் நிலை நிற்க உழைத்தவர்கள்
சான்றுகள் பலதையும் விட்டுச் சென்றனரே
ஒன்றாக நின்று ஒற்றுமையின் பலமாகி
உழைத்த பலர் வரலாறு படைத்தனரே
ஒளி இருந்தும் இருளை எதற்கு
வழி இருந்தும் வலி எதற்கு
துணிந்து நின்று மூத்தோர் வழி நடப்போமே