சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி வாரம்-19.01.2022 புதன்
கவி இலக்கம்-1444
கலக்கல்

தாயகத்தில் கிணற்று சேற்றை கலக்கி
இறைத்து துப்பரவாக்கி தெளிந்த தண்ணீ்ர எடுப்பர்
பாலில் தண்ணீரை கலக்கி
விற்பனை செய்வதில் லாபம் பெறுவர்
மதுவில் வேறு பானம் கலக்கி
குடித்து மகிழ்ந்து குடித்து கும்மாளம் போடுவர்
பள்ளி ஆய்வு கூடத்தில் மாணவர்கள்
இரசாயனம் கலக்கி ஆய்வில் படிப்பர்
கலப்படம் இல்லாத பொருட்களாக
தாயப் பாலும் முட்டையும் என அறிந்தேன்
கோப்பிக்குள் பால் சீனி போட்டு
கலக்கி குடித்தால் உடம்பில் உற்சாகம் ஏற்படும்
பாமுகத்தில் இளையோர் பல நிகழ்வுகளிலும்
பங்கு கொண்டு ஒரு கலக்கல் செய்வது
அதிசயமாக அற்புதமாக பார்க்கிறோமே