சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-17.01,2022
இலக்கம்-1442
ஆண்டு மாதம் வாரம் நாள்
————————————-
கடந்த ஆண்டு கழியும் போது
புது ஆண்டு பிறந்து வந்து விடும்
கடந்த ஆண்டு நடந்தவற்றை
நன்மையோ தீமையோ
மறந்து விடுதல் நன்றே என்று கூறுவேன்
ஆண்டு ஒன்று வந்து போகும்போது
வயதும் ஏறிக் கொண்டு போகின்றது
இந்த ஆண்டை சந்தோசமாய் ஏற்போம் நாம்

மாதங்களில் மார்கழி மாதம் சிறந்தது
விசேட நிகழ்வுகள் இடம் பெறுகின்றபோது ஆனந்தம்
பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருடமாகின்றது
நான் பிறந்த மாதம் மாசி மாதமாகியது

ஒவ்வொரு வாரத்திற்கும்
ஒவ்வொரு பலனுண்டு கணிப்பவர்கள் அதிகம்
வாரம் ஒரு முறையேனும்
ஓய்வு எடுப்பது உடல் ஆரோக்கியம் பெறும்
இயேசு வாரத்தின் ஞாயிறை ஓய்வு நாளாக்கினார்
வளர்பிறை ஒரு நாள் நல்லது என்பர்
தேய்பிறை நாள் நல்லதாக இருக்காதென்பர்

கடந்த நாட்கள் சம்பவங்கள் ஞாபகங்கள்
மனதில் மறக்கவே முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக
அமைந்து கொள்ள வேண்டுவோம்
என இறைவனிடம் வேண்டுவோம்