சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.03.2023
இலக்கம்-213
நாதம்
————-
அம்மாவின் ஆரிரோ தாலாட்டில்
மழலை உறக்க மூச்சின் நாதம்
கோயில் மணியின் டாங் டாங் ஒலியில்
குடும்பங்கள் ஆரவார நாதம்
குயிலின் கீச் கீச் ஒலியில்
செவிகளில் ஓசு கேட்கும் நாதம்
நாதஸ்வர ஓசையின் பீப்பீ ஊதுகையில்
எழுப்பிடும் ஓங்கார நாதம்
வீணையின் சுர வரிசை நரம்பினில்
பொங்கி எழும் சங்கீத நாதம்
நடராஜனின் கால் சலங்கை ஒலியினில்
ஆனந்த உச்சத்தின் நாதம்
இசைக் கருவிகள் தொடரும் நாதம்
உயிர்களுக்கு நோய்க்கு மருந்தாகும்