சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.08.2024
கவிதை வாரம்-275
இயற்கை அனர்த்தம்
——————
கேரளா வயநாடு அனர்த்தம் கொடுமையானது
பெரு வெள்ளம் நிலச்சரிவு அவலமானது
கோலங்கள் மாறி மீளாத துயரானது
புரட்டிப்போட்ட நிலச்சரிவு வியப்பானது
மா பெரும் மழையால் பெரும் அழிவானது
கொத்து கொத்தாக மரணங்கள் அதிகமானது
சொத்து பத்துகள் மண்ணுக்குள் புதைந்தே போனது
உறவுகளின் ஓலங்கள் விண்ணை முட்டியது
குடும்பமே ஒட்டு மொத்தமாய் தொலைந்தே போனது
உலகையே நடுங்க வைத்த அவலம் கொடுமையானது
ஒவ்வொரு ஆன்மாக்களின் இழப்பிலும் எமது மனம் இறைவனிடம் வேண்டுது
ஜெயா நடேசன்