David Anthony Says:
26/07/2024: at 17:20
Friday
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“நண்பர்கள் நட்பு பாராட்டும் சிறப்பான
மாதத்தில்
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
பொதுக்காலம்-16ம் வாரம்.வெள்ளி.
26/07/2024.
நற்செய்தி வாசகம்:
——————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது:
“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.“என்றார்.
(புனித மத்தேயு:13:22,23)
சிந்தனைக்கு:
—————————
“ நல்ல விதை.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
இயேசு உவமைகள் வழி மக்களுக்குப் போதித்தார்.
உவமையில் வருகின்ற நிலங்கள் நான்கு வகை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பு கொண்டவை. வழியோரப் பகுதி, பாறைப் பகுதி, முட்செடிப் பகுதி, நல்ல நிலம் என நான்கு வகை நிலங்களும் விவரிக்கப்படுகின்றன. இறைவார்த்தையைக் கேட்கின்ற மனிதர்கள் எல்லாருமே முழு மனத்தோடு அதைக் கேட்டு, உள்ளத்தில் ஏற்று, அதன்படி செயல்பட முன்வருவதில்லை என இந்த உவமை காட்டுகிறது. நல்ல நிலம் என்றால் என்ன? நம்மைத் தேடி வருகின்ற இறைவார்த்தையை நாம் ஏற்க முன்வர வேண்டும் (வழியோரப் பகுதி). இறைவார்த்தை நம்மில் ஆழமாக வேரூன்றி உறுதியாக நிலைக்க வேண்டும் (பாறைப் பகுதி). கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற உலகக் கவலை மற்றும் செல்வ மாயைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையைக் காத்திட வேண்டும் (முட்செடிப் பகுதி). இவ்வாறு செயல்படுவோர் பண்பட்ட, நல்ல நிலமாக இருந்து இறைவார்த்தை என்னும் விதையைத் தம்முள் ஏற்பார்கள்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
1 day ago
David Anthony Says: 25/07/2024at 14:15
Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
25/07/2024:வெள்ளி
நற்செய்தி வாசகம்: ———————————
« உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் »என்று கூறினார்.
(புனித மத்:20:27-28)
சிந்தனைக்கு:
——————————
”ஆன்மீகம்.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
இவர் பெரிய யாக்கோபு என்றும் சந்தியாகப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த
செபதேயு, சலோமி ஆகியோரின்
மகன்.
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும் என அதிகமாக ஆசைப்படுகின்றனர். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் செலவழிக்கின்றனர். செலவழித்த பின் அமைதியின்றி, ஆனந்தமின்றி அலைகின்றனர்.
« ஆன்மீகத்தில் »செல்வ செழிப்புமிக்கவரான இவர் தன்னோடு இருந்த மக்களுக்கு ஆன்மீக செல்வத்தை பகிர்ந்தார். அவர்களும் கிறிஸ்துவின் செல்வச் செழிப்பில் பங்கேற்க வழியமைத்துக் கொடுத்தார்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
Selvi Nithianandan
1 day ago
கேள்வி வாரம் 431 25.07.2024
1.சீனாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓய்வூதிய வயது என்ன?
2.பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக எத்தனைபேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது?
3.எந்த நாட்டில் மசூதிக்கு ஈரான் தடைவிதித்தது?
Rajani Anton
1 day ago
வணக்கம்….தடைகளைத் தாண்டியும்வெற்றிநடை போடும்
பாமுகம் தங்குதடையின்றி வீறுநடை போட வாழ்த்துக்கள்.
அரும்பணியாற்றும் அதிபருக்கும் வாணி மோகனுக்கும் மிக்க நன்றி.படைப்புக்கள் யாவும் பல்கிப் பெருகட்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
DAVID
2 days ago
David Anthony Says: 24/07/2024at 21:20
Wednesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
24/07/2024: « புதன்
நற்செய்தி வாசகம்: —————————
“இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.
(புனித மத்:13:8,9)
சிந்தனைக்கு:
——————————
“நிலத்தின் பலன்.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
வாழ்வின் வெற்றிக்கு எது சரியான வழி? என்பதற்கான உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். விதைப்பவர் நிலத்தில் அறுபது மடங்கு மற்றும் நூறு மடங்கு பலன் கொடுக்கும் நிலத்தைப் பார்ப்போம். அங்கே விழுந்த விதைகளை, அந்த «நிலமானது »தனக்குள்ளாக ஏற்றுக்கொள்கிறது. தனது முழு ஆற்றலையும், சக்தியையும், அந்த விதை வளர்வதற்கு கொடுக்கிறது. எப்படியும் அந்த விதை, அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும் என்று தன்னையே அந்த நிலம் தியாகமாகக் கொடுக்கிறது. நமது உள்ளம் அப்படிப்பட்ட அந்த நிலமாக இருக்க வேண்டும். பல நல்ல சிந்தனைகள் நமக்குள்ளாக விதைக்கப்படுகிறது. அது எங்கிருந்து வந்தாலும், திறந்த உள்ளத்தோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறபோது, அது நமக்குள்ளாக ஆழமாக வேரூன்ற தொடங்குகிறது.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Jeyanthi Bala
3 days ago
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன்
ஐயாவிடம் எனது கேள்வியினை கேட்டு பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி பாமுகம்ஒலிபரப்பு தொழில்நுட்ப்பத்தடங்கல் எல்லாம் விலகி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நிகழ வாழ்த்துக்கள்
வசந்தா ஜெகதீசன்
3 days ago
உற்சாக வணக்கம்
தடங்கல் கடந்தும் தனித்துவம் மிளிர தொடரும் படைப்புக்கள், தொகுப்புக்கள் ஆர்வமுடன் இணைந்து தொகுப்புக்களையும், இணைநிகழ்வுகளையும் உற்சாகமாக தொகுத்தளிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். பாமுக பணிக்கும் இடைத்தொடர்பில் இயங்கிட வலுப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவன ஒத்துழைப்புச் சேவைக்கும்
நன்றிகள் பாராட்டுக்கள்.
சிவதர்சனி
4 days ago
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 534!!
1.பழமொழியில் ஒப்பிட்டுச் சொல்லும் ஒரு வார்த்தை.. ஒன்பது எழுத்துக்கள்?
2.ஒன்று நான்கு ஐந்து ..சேர இதனாலும் கோபம் கூடும்?
3.ஒன்று மூன்று சேர பழைய கால பாவனைப்பொருள் ..
எழுத்தைப் பொறிக்க
4.இறுதி இரண்டு சொற்கள் உணவுப்பொருள்..!!
1.இது ஒரு கலை வடிவம்..!!
ஆறு எழுத்துச் சொல்!!
கரகாட்டம்
2.ஒன்று கடைசி
இரண்டும் சேர ஒரு வாத்தியக் கருவி!
3.ஒன்று நான்கு ஐந்து ஆறு சேர கிரகங்களோடு தொடர்பு கொண்ட
ஒன்று ?
இரண்டு மற்றும் கடைசி சேர ஒரு உறுப்பு?
மூன்று நான்கு ஐந்து ஆறு சேர கடுமையாய் நடப்பது ..
David Anthony Says:
22/07/2024 at 16:55
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
22/07/2024:திங்கள்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு மகதலா மரியாவிடம்!
“நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்.
(புனித யோவா:20:17-18)
சிந்தனைக்கு:
——————————
“ஆணாதிக்கம்.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
இயேசுவின் உயிர்ப்புக்கு நமக்கு மரிய மதலேனாளை ஒரு முக்கிய சாட்சியாகத் தருகின்றார் நற்செய்தியாளர்.
பொதுவாக யூத சமுதாயத்தில் ஒரு பெண்ணின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யூத சமுதாயம் ஆணாதிக்கச் சிந்தனை மிகுந்த சமுதாயம். பெண்களுக்கென்ற மிகுந்த கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட பிண்ணனியில் யோவான் நற்செய்தியாளர் பெண்ணாகிய மரிய மதலேனாளை இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாகத்தருவது வியப்பாக இருக்கின்றது.
நம் வாழ்வில் நாம் எவ்வளவுதான் உண்மையாக வாழ வேண்டும், நேர்மையாக விளங்க வேண்டும் என விரும்பினாலும், பல வேளைகளில் அவற்றில் தவறி விடுகின்றோம். இதில் கவனிக்கப்பட வேண்டியதும், திருத்தப்பட வேண்டியதும் என்னவெனில், அதற்கான பொறுப்பை நாம் ஏற்காமல் சூழ்நிலைகள் மீது பழிபோடுகின்றோம். எல்லாச்சூழ்நிலைகளிலும் உண்மையாக இருக்க இறையருள் வேண்டுவோம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
DAVID
5 days ago
David Anthony Says: 21/07/2024at 18:15
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
21/07/2024: ஞாயிறு.
நற்செய்தி வாசகம்: —————————
“மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
(புனித லூக்கா:10;42,42)
சிந்தனைக்கு:
——————————
“நல்ல பங்கு.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே! மார்த்தாள், மரியாள், லாசர் இவர்களது வீடு, இவர்களின் சந்திப்பு மிகவும் உதவியது. பெற்றோர் இல்லாத அவர்களுக்கும் நோயுற்ற லாசருக்கும் உதவியது. பயணக்களைப்போடு வந்த இயேசுவை மார்த்தாள் பல்சுவை உணவுடன் உபசரித்தாள். மனச்சுமையோடு வந்த இயேசுவை அவர் பாதம் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டு,அவரது உணர்வைப் பகிர்ந்து,மன வேதனையைக் குறைத்தாள் மரியாள்! இருவரின் செயல்களும் சிறப்புடையதாயினும், மரியாவின் செயல் அவசியமானது, அவசரமானது, அந்த நேரத்திற்குரியது. எனவே இயேசு அவள்; செயலைப் பாராட்டுகின்றார். மற்றவர்களிடம் எங்கள் கவலைகளை சொல்லும்போது கிடைக்கும் ஆறுதல் ஒரு நிமிடத்தில் மறைந்து போகிறது. ஆனால் கடவுளிடம் நம் தோல்வி, வெற்றிகளை சொல்லும்போது ஆறுதலும், ஆசீர்வாதமும் கிடைப்பதோடு முழுமனநிறைவும் கிடைக்கின்றது.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
7 days ago
David Anthony Says:
19/07/2024 at 20:35
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு”பாராட்டும், மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:15ம் வாரம்
19/07/24. வெள்ளி.
நற்செய்தி:
———————
அக்காலத்தில் இயேசு கூறியது: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
(புனித மத்:12:7,8)
சிந்தனைக்கு:
——————————
“யதார்த்தம்.”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இயேசு தன்னுடைய சீடர்கள் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். அந்த கதிர்களை திருடி விற்று, இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பசிக்காக, தங்களின் பசியை ஆற்றுவதற்காக அந்த கதிர்களைப் பறிக்கின்றார்கள். இங்கே இயேசு தன்னுடைய சீடர்களின் உள்மனதை அறிந்தவராக, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்காக வாதாடுகின்றார். யார் சரி? என்பதைக்காட்டிலும், எது சரி? என்பதை அடித்தளமாகக் கொண்டு வாதாடுகின்றார். இன்றைக்கு, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்காக நீதி, நியாயம் விற்கப்படுகின்றது.
எப்படி இந்த முரண்பட்ட சமுதாயத்தைச் சீர்திருத்தப் போகிறோம்? சிந்திப்போம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:
17/07/2024 at 18:35
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு”பாராட்டும், மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:15ம் வாரம்
17/07/24.புதன்.
நற்செய்தி:
———————
அக்காலத்தில் இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என்றார்.
(புனித மத்:11:25-26)
சிந்தனைக்கு:
——————————
“ஞானிகள்.
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கின்றார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மமதையாக
மேலோங்கியிருக்கின்றது.
ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கின்றார்களோ, அவர்கள் தான் ஞானிகள்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
10 days ago
David Anthony Says;16/07/2021 at 21:00,Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,”நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான மாதத்தில்…….
இறைவன் குரலில்:
16/07/21:பொதுக்காலம் 15ம்வாரம் செவ்வாய்,
நற்செய்தி வாசகம்:
——————————-
« தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். »
( புனித மத்:11;24)
சிந்தனை துளிகள்:
———————————-
“துன்பத்தின்பலன்.”
———————————-
என் அன்புச் சகோதர சகோதரிகளே!
துன்பம் தான், நமக்கு பல வாழ்க்கை அனுபவப்பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றது. துன்பத்தில் எப்போதும் எதிர்மறையாக எண்ணாமல், அதிலிருந்து கற்றுக்கொள்ளக்
கூடியவை எவை? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். அப்படி கற்றுக்கொள்வது, நமது வாழ்வை மாற்றக்கூடிய அனுபவமாக இருக்கும். வல்ல செயல்கள், அருட்கொடைகள். வாழ்வின் நலன்கள் கடவுள் நமக்குத் தரும் நல்ல வாய்ப்புக்கள். அது போல, இன்றைய நம் வாழ்விலும் கடவுள் தரும் கொடைகள்,செல்வங்கள்
அறிவுரைகள்,அருளுரைகள், அன்றாட அதிசய நிகழ்வுகள் ஆகியவை இன்று நமக்கும், நம் ஊருக்கும், நகருக்கும், நாட்டுக்கும், இறைவன் கொடுக்கும் வாய்ப்புக்கள். இவற்றைப் பயன்படுத்தத்தவறினால், எச்சரிக்கை நமக்கும்தான்.
இந்த நகரங்கள் ஊர்கள் பெயர்கள்தான் உள்ளன என்று எண்ணாதே! உன் ஊர், நகர், நாடு இந்த வரிசைப்பட்டியலில் வராது பார்த்துக்கொள்.கொரோனா உலகம்
முழுவதையும் பாதித்திருக்கின்றது என்பதை நினைவில் கொள்வோம். ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)
தொடரும்………
வசந்தா ஜெகதீசன்
10 days ago
உற்சாக வணக்கம்
தொடரும் zoom நிகழ்வுகளுக்கும்
தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். பாமுகச்சிறப்பு கெளரவப்படுத்தல், pmp அரங்குகள் கண்ட சிறப்புகளுக்கும் பாராட்டுக்கள்.
பிறந்தநாள் மகிழ்வில் வாழ்த்துக்கள் இணைத்த அனைவருக்கும் அன்புமிகு நன்றிகள்.
தொடரும் நிகழ்வுகளும், நாளை வலுப்படுத்தலுடன் மிளிரும் பாமுகச் சேவைக்கும் வாணி மோகன் அவர்களின் தொடர்பணிக்கும் மிக்க மிக்க நன்றிகள்.
“ஆண்டுகள் தொடர்பணி
அங்கீகார விழுமிய வழி
தாங்கிய சுமைகளின்
தகுந்தநிலை மகுடம்
பிரகாச ஒளிர்வுடன் நிமிர்க மகிழ்க ” வாழ்த்துக்கள். நன்றி
Jeyanthi Bala
11 days ago
இனியகாலை வணக்கம் திருமதி வாணிமோகன் இராமநாதகுருக்கள்ஐயா
பெண் நட்சத்திரம் கேட்டை இராசி விருட்சிகம்
ஆண் நட்சத்திரம் சித்திரை
இராசி கன்னி
இருவருக்கும் வருகிற வருடம் 2025 ஆண்டு வைகாசிமாதம் ஆங்கில திகதி யின்படி
16.05 2025 வெள்ளிக்கிழமை
29.05.2025 வியாழக்கிழமை
எந்த நாள் திருமணம்செய்வதற்க்கு நல்லநாள் என்று பார்த்து சொல்லமுடியுமா?
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்புடன்அமைய வாழ்த்துகள்.
DAVID
12 days ago
David Anthony Says: 14/07/2024 at 19:40
Sunday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:15ம் வாரம்
14/07/2024
நற்செய்தி வாசகம்: —————————- « அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் »என்றார்.
(புனித மாற்:6:1,12,13)
சிந்தனைக்கு:
——————————
“விருந்தோம்பல்”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! மத்திய கிழக்குப்பகுதிகளில் “விருந்தோம்பல்”இறைப்பணியாகக் கருதப்பட்டது. புதியவர் ஒருவர் ஊருக்குள் நுழைகின்றபோது, தனது தேவைக்காக மற்றவர் உதவியை அவர் எதிர்பார்க்கத் தேவையில்லை. மாறாக, அந்த ஊரில் உள்ளவர்களே அவரை வரவேற்று, உபசரித்து அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பார்கள். இந்த பிண்ணனியில்தான், இயேசுவின் இன்றைய போதனை அமைத்திருக்கின்றது.
ஏனெனில், யூதர்களுக்கு மற்ற நாடுகள் தூய்மையற்ற நாடுகள். பாலஸ்தீனத்திற்கு வெளியே பயணம் செய்துவிட்டு, யூதர் ஒருவர் நாடு திரும்புகின்றபோது, தங்களின் கால்களில் படிந்துள்ள தூசியை உதறித்தள்ளிவிட்டு தான், நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்பது யூத ராபிக்களின் அறிவுரையாகும்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
13 days ago
David Anthony Says:
13/07/2024 at 21:15
Saturday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
13/07/2024:சனி
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.” என்றார்.
(புனித மத்தேயு:10:33)
சிந்தனைக்கு:
——————————
“பராமரிப்பு.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கின்றது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கின்றபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கின்றோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கின்றவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கின்றவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோம்.
வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கின்றோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கின்றோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகின்றோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கின்றோம். கடவுளின் ஆழமான அன்பு எப்போதும் நமக்கு உண்டு. நாம் ஒருநிமிடம் கூட சோர்ந்து போகக்கூடாது. அவர் நம்மோடு இருக்கின்றார் என்கிற அந்த நம்பிக்கை, வாழ்வில் துணிவோடு, மகிழ்வோடு நாம் இருக்க நமக்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
14 days ago
David Anthony Says:
12/07/2024 at 12:15
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
12/07/2024: வெள்ளி
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:
மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”என்றார்.
(புனித மத்தேயு: 10:23)
சிந்தனைக்கு:
——————————
“பணியாளர்கள்.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கின்றார். நற்செய்தியை முழக்கமிட்டு அறிவிக்கும்போது, பேசுவது நாம் அல்ல தந்தையின் ஆவியாரே. பேசும் பொருளும் நம்முடையது அல்ல . பேசும் முறையும் நமது அல்ல . என்ன பேசுவது எப்படி பேசுவது என கவலை வேண்டாம். என்ன பேச வேண்டும்,; எப்படி பேசவேண்டும் என்பது அந்நேரத்தில் அருளப்படும். நற்செய்திப்பணியாளர்கள் இறைவனின் பணியாளார்கள். இறைபணிகளுக்கும் பணியாளர்களுக்கும் துன்பங்கள் தடைகள்; தடங்கல்கள் கொடுக்கும் போதெல்லாம் இறைவனோடு போராடுகிறோம்.
இறைவனோடு போராடி வென்ற மனிதன் இல்லை, அழிந்தவர்கள் ஏராளம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
DAVID
15 days ago
David Anthony Says: 11/07/2024at 20:30
Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
11/07/2024: வியாழன்.
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று « விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். »என்றார்.
(புனித மத்தேயு: 10: 7-8)
சிந்தனைக்கு:
——————————
“நற் செய்தி.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! ஒவ்வொரு நாளும் காலையில் நாம் சந்திக்க ஒவ்வொருவருக்கும் ஆசியை, வணக்கத்தை, அமைதியை ஆசி மொழியாகச் சொன்னால் என்ன? அது ஒரு நற்செய்தி அறிவிப்பன்றோ! பிறர் செவி மடுத்தாலும், இல்லாவிட்டாலும் பிறரை வாழத்துவோம். அந்த வாழ்த்துக்கும், ஆசிக்கும் அவர்கள் தகுதி உடையவர்களாய் இருந்தால், அது அவர்களிடம் தங்கும். இல்லாவிட்டால், நம்மிடமே திரும்பி வரட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் வாழ்த்துவோம், அனைவருக்கும் ஆசி வழங்குவோம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
Selvi Nithianandan
15 days ago
கேள்வி வாரம் 429 11.07.2024
1.மிகவும் ஆபத்தான விமானப்பாதைகள் எது?
2.நிலம் வாங்குவது கஷ்டமான முதல் இருநாடு எவை?
3.தம்குட்டிகளை குழந்தைபோல் கண்காணிக்கும் மூன்று விலங்குகள்?
புலர்ந்த பொழுது உற்சாகமூட்ட
பாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.
தடைகள் தகர
தொடரும் நிகழ்ச்சிகளை ஆவலோடு எதிர்பார்த்படி
அனைத்தும் நலமேயாக இறை ஆசீர் வேண்டி வாழ்த்துகின்றேன்.
DAVID
16 days ago
David Anthony Says: 10/07/2024at 17:30
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
« நண்பர்கள் நட்பு பாராட்டும் »
மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
10/07/2024: புதன்.
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து
“பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது “விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”எனப் பறைசாற்றுங்கள்.”
என்றார்.
(புனித மத்தேயு:10:1;5-7)
சிந்தனைக்கு:
——————————
“இயல்பு”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்புகின்றார்?மக்களுக்கு கடவுளின் ஆசீரும், அருளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனுப்புகின்றார்.
இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் “இயல்பு”மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர். நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரை
குத்தப்பட்டவர். அதேபோல்,தீவிரவாதி என அறியப்பட்ட சீமோன். நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கின்ற தீவிரவாதி. நாம் அனைவருமே மற்றவர்களுக்கு கடவுளின் அன்பு, அருள், ஆசீர், இரக்கம், மன்னிப்பு அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மக்களை முழுமையாக கடவுளிடம் கொண்டுவர, எல்லாவித உதவிகளையும் முழுமையாகச் செய்ய வேண்டும்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Jeyanthi Bala
16 days ago
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன்
இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
மறு ஒலிபரப்பு கேட்கிறேன்
நன்றி
DAVID
17 days ago
David Anthony Says: 09/07/2024at 12:36
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
« நண்பர்கள் நட்பு பாராட்டும் »
மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
09/07/2024: செவ்வாய்
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்”
என்றார்.
(புனித மத்தேயு:9;37,38)
சிந்தனைக்கு:
——————————
“அறுவடை.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இயேசு திரளான மக்களைக் கண்டபோது அவர்கள் “ஆயனில்லா ஆடுகள்” போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டதைப் பார்த்துப் பரிவு கொண்டார் என்று நற்செய்தி கூறுகின்றது. ஒவ்வொரு குருவின் கடமையும், பணியும் இதுதான்.
மக்களின் பிற எல்லாத் தேவைகளையும் குறைகளையும் விட ஆயனில்லா ஆடுகள் போல் இருந்தது தான் மிகப்பெரும் குறை என்பது இயேசுவின் கணிப்பு. நல்ல ஆயர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் நம்மிடையே உருவாவார்களாயின், பாதிக்கப்பட்டோரின் கூட்டம் குறையும்.
இந்தப் பரிவின் பணியைச் செய்வதற்கு அதிகமான வேலையாள்கள் தேவை. எனவே, “அறுவடை”யின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்ற இயேசுவின் அழைப்பிற்கேற்ப இறையழைத்தலுக்காகவும் நாம் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Jeyanthi Bala
17 days ago
இனிய காலை வணக்கம் திருமதிவாணிமோகன் நேற்றையதினம் பிறந்தநாளைக்கொண்டாடிய பாமுக அதிபர் இயக்குனர் திரு நடாமோகன் அவர்களுக்கு எங்களுடைய அன்பான வாழ்த்தினை இறைஆசியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் இன்றைய பாமுகநிகழ்வுகள் யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
மேலும் நேற்றைய தினம் ஆன்மீகபால நிகழ்விற்க்கு ஒரு வினா ஐயாவிடம் கேட்டு எழுதியிருந்தேன் மறு ஒலிபரப்பில் தான் கேட்டேன் பதில் வரவில்லை போல் உள்ளது உறவுகளின்கருத்து பக்கத்தில் போட்டிருந்தேன் அடுத்த திங்கள் வாசிப்பீங்களா?
மிகவும் நன்றி
சிவதர்சனி
18 days ago
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் !!
1.இது ஒரு கலை வடிவம்..!!
ஆறு எழுத்துச் சொல்!!
2.ஒன்று கடைசி
இரண்டும் சேர ஒரு வாத்தியக் கருவி!
3.ஒன்று நான்கு ஐந்து ஆறு சேர கிரகங்களோடு தொடர்பு கொண்ட மங்கை!!
ஒன்று இரண்டு மற்றும் கடைசி சேர ஒரு உறுப்பு?
மூன்று நான்கு ஐந்து ஆறு சேர கடுமையாய் நடப்பது ..
பிறந்த நாள் வாழ்த்து:
———————————
அன்பு தம்பி திரு.நடா மோகன்
அவர்கட்கு!
எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இறைவன் உற்சாகம்,உடல், உள,ஆன்ம, சுகங்களோடு இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
டேவிட் அண்ணன்.
(பிரான்ஸ்)
DAVID
18 days ago
David Anthony Says: 08/07/2024at 20:36
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
நண்பர்கள் நட்பு பாராட்டும்
மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
08/07/2024: திங்கள்.
நற்செய்தி வாசகம்: —————————
அப்பெண், « நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று »என்றார்.(புனித மத்தேயு:9;21,22)
சிந்தனைக்கு:
——————————
“வல்லமை.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! லேவியர் 15: 25 – 27 ல் “பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப்படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக, இரத்தப்போக்குடைய பெண் தீட்டுள்ளவளாகக் கருதப்பட்டாள். அவள் தொட்ட அனைத்தும் தீட்டானதாகக் கருதப்பட்டது.
அந்தப்பெண் வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். மக்களோடு மக்களாக அவள் செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தோடு இயேசு சென்றபோது, அவரது ஆடையை தொடுகின்றாள் நலம் பெறுகின்றாள்.ஏனென்றால், என்னென்ன மருத்துவம் பார்க்க முடியுமோ, அவையனைத்தையும் அவள் பார்;த்திருந்தாள். இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் அவளுக்கு இயேசுவிடமிருந்து “வல்லமை”கிடைக்கிறது.
குணமடைந்தாள்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இரட்னேஸ்வரி மனோகரன்.
18 days ago
இனிய வணக்கம்.
இன்று மலர்ந்திருக்கும் புதிய ,அகவையில் அகமகிழ்ந்திருக்கும் , இலண்டன் தமிழ் வானொலி, பாமுக அதிபர் திரு. நடாமோகன் அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன் முகத்துடன் சிறுவர்முதல் , பெரியவர்வரை உற்சாகம் கொடுத்து, ஊக்கப்படுத்தும் உயர்ந்த உள்ளம் நீடூழி வாழ்க வளர்க உயர்க என பிறந்தநன்நாளில் மனமாரவாழ்த்துகின்றோம்.
அன்பான திரு. திருமதி. மனோகரன் குடும்பமாக..
வசந்தா ஜெகதீசன்
18 days ago
உற்சாக வணக்கம்
பாமுக அதிபர் நடாமோகன் அண்ணா அகவை உயர்வில் அகமகிழும் வேளை
ஆற்றும் பணிகள் அளப்பெரிதாய்
ஊட்டும் பன்மொழி ஆற்றல் அடுத்த தலைமுறை விருட்சமாய்
முதன்மை எத்தனங்கள் முதலொலியாய் வளர்க்கவே!
வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் கோடி வாழாத்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு.
மிக்கநன்றி
இன்றைய மோகன் மாமா பொன்சர் இணைவில் அட்சரன்
அச்சுதன் இராமதாஸ். நன்றிகள்
Peirisnevis
18 days ago
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு நடா மோகன் அலர்களுக்கு ,,வான்உ டல்உள்ள உற்சாகத்துடன் உறுதி உள்ள மனதுடனும் ஊக்கமூட்டி வளரத்தெடுக்கும் பண்புடனும்்
வளமுடன் வாழ்க இறை ஆசீர் கூடி வர வாழ்த்துகின்றேன்
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் இராமநாதகுருக்கள்ஐயா கடந்தகிழமை நான் கேட்டிருந்த கேள்வியின்படி 2025 ம் ஆண்டு வைகாசி மாதம் திருமணம் செய்யலாம் என்று சொல்லி இருந்தீர்கள் எனவே வருகிறவருடம் வைகாசிமாதம் திருமணம் செய்து வைக்ககூடிய நல்லநாள் எடுத்து தருவீங்களா?
பெண் கேட்டை நட்ச்சத்திரம் விருச்சிக இராசி
ஆண் சித்திரை நட்சத்திரம் கன்னிஇராசி
வியாளன்
வெள்ளி
ஞாயிறு
ஆகிய தினங்களில் பொருத்தமான ஏதாவது ஒரு தினம் பார்த்து தந்தால் மிகவும் நல்லது மிகவும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள்யாவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மறு ஒலிபரப்பில் நிகழ்ச்சிகள் கேட்பேன்
மிகவும் நன்றி
DAVID
19 days ago
David Anthony Says:
07/07/2024at 19:05 Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி, « நண்பர்கள் நட்பு பாராட்டும் »மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி………
இறைவன் குரலில்:
07/07/24:பொதுக்காலம் 14ம் ஞாயிறு தினமாகும்.
நற்செய்தி வாசகம்:
——————————-
“இயேசு அவர்களை நோக்கி,
« சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப்பெறுவர்.
என்றார். »
( புனித மாற்கு:6;4)
சிந்தனை துளிகள்:
———————————
“இறை நம்பிக்கை.”
———————————
என் அன்புச் சகோதர சகோதரிகளே!
இன்றைய நற்செய்தியில்,இன்றைய வாசகம், இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது, அவரால் வல்ல செயல் எதையும் செய்ய முடியவில்லை. அதற்கான காரணம், இயேசுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாம்.
ஆம், எசேக்கியேல் போல, ஆண்டவர் இயேசு போல, ஓர் இறைவாக்கினர் நமது வீட்டிலே, நமது ஊரிலே, நமது பங்கிலே, நமது பணியிடத்திலே இருக்கலாம். சாதி, ஊர், ஏழ்மை, எளிய பணி, குறைந்த படிப்பு, பெண், வயதுக் குறைவு… எனப் பல காரணங்களை முன்னிறுத்தி அவர்களை இறைவாக்கினராக, உண்மையை அறிவிப்பவர்களாக, மனச்சான்றின் குரலாக, இறைநீதியின் பங்காளியாக நாம் ஏற்க மறுக்கலாம், பார்க்கத் தவறலாம்.
இன்றைய வாசகங்கள் நம் கண்களைத் திறக்கட்டும். நான் மட்டும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பரிசேயருடைய முன்சார்பு எண்ணம் நமக்குள்ளும் இருப்பதை நாம் உணர்ந்து அதைக்களைய முற்படுவோம். இறையாட்சிக்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்வோம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Selvi Nithianandan
20 days ago
கேள்வி வாரம் 428
1.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எங்கு நடைபெறுகிறது?
2.ஆனந்த் அம்பானி எத்தனைகோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் திருமணத்தில் அணிந்திருந்தார்?
3.சூயிங்கத்திற்க்கு இந்தவாரம் தடைவிதித்துள்ள நாடு எது?
David Anthony Says: 05/07/2024at 16:43
Friday அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
« நண்பர்கள் நட்பு பாராட்டும் »மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
05/07/2024: வெள்ளி
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு அவர்களை நோக்கி,நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. « பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன். »என்றார்.(புனித மத்தேயு:9;12,13)
சிந்தனைக்கு:
————————-
“சகோதர, சகோதரிகளே! எங்கே இயேசு, பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் விருந்து உண்கிறார்? யாருடைய வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது? லூக்கா நற்செய்தியாளர் இந்த விருந்து, மத்தேயுவின் வீட்டில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார். அழைத்தல்“ என்கிற வார்த்தைக்கான பொருளாக, விருந்தினர்களை இல்லத்திற்கு அழைப்பது என்பது பயன்படுத்தப்படுகிறது. இயேசு சொல்கிறார்: நீங்கள் விருந்தினர்களாக தற்புகழ்ச்சி உள்ளவர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் அழைக்கிறீர்கள். நானோ, தங்கள் குற்றங்களை நினைத்து வருந்துகிறவர்களையும், திருந்துவதற்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறவர்களையும் அழைக்கிறேன்.
இயேசுவை உண்மையாக நாம் தேட வேண்டும். உண்மையான உள்ளத்தை வெகுஎளிதாக இயேசு கண்டறிந்துவிடுகிறார். அவர் நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளை வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
22 days ago
David Anthony Says: 04/07/2024at 20:15
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
04/07/2024: வியாழன்.
நற்செய்தி வாசகம்: —————————இயேசு,முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
(புனித மத்தேயு:9;6-8)
சிந்தனைக்கு:
————————-
“கடவுள் பயம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! நவீன உலகில் மனிதர்களின் கண்டுபிடிப்புகளும், வளர்ச்சியும், கடவுளைப் பற்றிய பயமே இல்லாமல், இந்த இளையதலைமுறையை பாழ்படுத்துகிறது. அதனுடைய வெளிப்பாடு தான், கொலைகளும், கொள்ளைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. மனநிம்மதி இல்லாமல், கவலை மனிதர்களை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றது. கடவுள் பயம் கொண்டு, வாழ்வில் மகிழ்வோடு வாழ்வோம்
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Selvi Nithianandan
22 days ago
கேள்வி வாரம் 428
1.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எங்கு நடைபெறுகிறது?
2.ஆனந்த் அம்பானி எத்தனைகோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் திருமணத்தில் அணிந்திருந்தார்?
3.சூயிங்கத்திற்க்கு இந்தவாரம் தடைவிதித்துள்ள நாடு எது?
.
DAVID
23 days ago
David Anthony Says: 03/07/2024at 18:50
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
03/07/2024:புதன்.
*புனித தோமா – திருத்தூதர் விழா.*
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.
(புனிதயோவான்:
20:26;28)
சிந்தனைக்கு:
——————————
“கிறீஸ்தவ வாழ்வு.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்று நாம் திருத்தூதர் தோமையாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள்
உடன் வாழும் பேற்றினைப் பெற்றிருந்து இந்தப் புனிதரிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். கிறிஸ்தவ வாழ்வு என்பது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு அல்ல. அது மற்றவரோடு இணைந்த வாழ்வு. மற்றவர்களோடு ஒன்று சேர்ந்து வாழ்கின்ற வாழ்வு. துன்பமோ, கவலையோ, எதுவென்றாலும், நாம் மற்றவர்களோடு இணைந்து வாழக்கூடிய வாழ்வு. மனிதன் குடும்பமாக வாழ இறைவனால் அழைக்கப்பட்டிருக்கின்றான். அதுபோல கிறிஸ்தவன் சமூகமாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்றான். அவனது விசுவாசம் பிற மனிதர்களோடு உறவை உண்டாக்குகிறது. விசுவாசத்தில், இறைவனை அனைவரும் தந்தை என அழைப்பதால் நாம் அனைவரும் சமூகமாக வாழ வேண்டும் என்பது இறைத்திட்டம். ஆகவே விசுவாசம் என்பது பரந்து விரிந்த ஒரு வாழ்க்கை முறை. அதுவே கிறிஸ்தவம். அவனே கிறிஸ்தவன்(ள்). அத்தகைய வாழ்வை நாம் சிறப்பாக வாழ்வோம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Jeyanthi Bala
23 days ago
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மறு ஒலிபரப்பில் கேட்டுக்கொள்வேன்
நன்றி
DAVID
24 days ago
David Anthony Says: 02/07/2024 at 20:30
Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,”நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான மாதத்தில்”
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
02/07/2024: செவ்வாய்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு சீடர்களை நோக்கி:
”நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்கள் எல்லாரும், காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.
(புனித மத்தேயு:8;26,27)
சிந்தனைக்கு:
————————-
“வீசும் புயல்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
உதவி எனக்கு உன்னதத்திலிருந்து வரும் என்று உறுதியாக நம்பும் மனிதனுக்கு, கடவுள் தம்அருட்கரத்தை வானிலிருந்தும் நீட்டுவார். அண்டை அயலாரும் அத்தகையோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவர். எனவே அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் வீசும் புயல்கள் எளிதில் நீங்கும். கடல்கொந்தளிப்புகளும் விரைவில் அடங்கும். எனவே வாழ்வில் வீசும் புயல்கண்டுபேதலித்துவிட வேண்டாம். என்இயேசு என்னோடு இருக்கின்றார். என் அருகில்இருக்கின்றார். அவரது துணை எனக்கு கிடைக்கும்என்றதுணிவோடு எதிர்கொள்வோம். அணுகும்விதம்சரியானால் நல்லவை நடக்கும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டுபுது
வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
நகுலவதி தில்லைத்தேவன்.
24 days ago
இனிய காலை வணக்கம்
காலையிலுருந்து நிகழ்வுகள் சிறப்பாக அமைந்தது .
சிறப்பாக இனைத்து எல்லோருக்கும்
சிறப்பு வாழ்த்துக்கள்.
வாணிக்கும் வாழ்த்துக்கள்
Jeyanthi Bala
24 days ago
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் நேற்றைய தினம் ஆன்மீகபாலநிகழ்ச்சிகான பதில் மறு ஒலிபரப்பில் கேட்டேன் மிகவும் நன்றி அடுத்தகிழமையும் ஒரு கேள்வி உள்ளது அன்று எழுதிவிடுகிறேன் ஐயாவிடம் கேட்டு சொல்ல முடியுமா?
மிகவும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்
சிவதர்சனி
25 days ago
1.இலக்கியம் ஒன்று..ஏழெழெத்துச் சொல்?
2.முதல் மற்றும் கடைசி இரண்டும் சேர காலத்தை குறிக்கும் சொல்?!
4.ஒன்று இரண்டு மூன்று மற்றும் கடைசி சேர வாசனை எனப்பொருள் தரும்?
David Anthony Says:
01/07/2024 at 11:40
Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி «நண்பர்கள் நட்பு » பாராட்டும்மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
01/07/2024: திங்கள்.
நற்செய்தி வாசகம்: —————————
“இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.(புனிதமத்:8;22)
சிந்தனைக்கு:
————————-
“நியதி.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நம்மில் பலர், கிறிஸ்தவம் என்பது ஒரு வகையான மதிப்புக்குரிய வாழ்க்கை என்று நினைக்கின்றோம். தன் தந்தையை அடக்கம் செய்து விட்டுவர அவன் அனுமதி கேட்டது, தாய் தந்தைக்குரிய கடமையை நிறைவேற்றும் செயலாகும்.எலியா இறை வாக்கினர், எலிசா இறைவாக்கினரை அழைத்தபோது, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார்.கடவுளை தேடிச்செல்லும் வேளை, நம் கடமைகளையும் செய்ய வேண்டும் என்பது இவ்வுலக வாழ்வின் “நியதி”.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்விக் கணைகள் (559) புள்ளிகள் (.26.07.2024)
ஜெயா நடேசன் 275
பத்மினி கமலகாந்தன் 253 நகுலவதி தில்லைத்தேவன் 221
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 171
வாணி நடாமோகன்266 சறோஜினி சோதிராஜா 260
நேவிஸ் பிலிப்ஸ் 200
ஜெசி மணிவண்ணன் 255
ராஜினி அல்போன்ஸ்- 259 லோஜினி முகுந்தன் 240
ராதிகா ஜங்கரன் 115
இரட்னேஸ்வரி மனோகரன் 05
சாந்தினி துரையரங்கன் 05
வஜிதா முகமட்33
நகுலா சிவநாதன் 46
ஜெயமலர் ஜெயம்136
தர்ஜினி சன்முகநாதன் 71
பத்மலோஜினி திரு 14
ஜெனி 05
நகுல் 25
அபிராமி 34
ஆதவன் 10
நடாமோகன் 06
உமா காண்டீபன் 05
David Anthony Says:
26/07/2024: at 17:20
Friday
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
“நண்பர்கள் நட்பு பாராட்டும் சிறப்பான
மாதத்தில்
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்: ——————————
பொதுக்காலம்-16ம் வாரம்.வெள்ளி.
26/07/2024.
நற்செய்தி வாசகம்:
——————————-
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது:
“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.“என்றார்.
(புனித மத்தேயு:13:22,23)
சிந்தனைக்கு:
—————————
“ நல்ல விதை.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
இயேசு உவமைகள் வழி மக்களுக்குப் போதித்தார்.
உவமையில் வருகின்ற நிலங்கள் நான்கு வகை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பு கொண்டவை. வழியோரப் பகுதி, பாறைப் பகுதி, முட்செடிப் பகுதி, நல்ல நிலம் என நான்கு வகை நிலங்களும் விவரிக்கப்படுகின்றன. இறைவார்த்தையைக் கேட்கின்ற மனிதர்கள் எல்லாருமே முழு மனத்தோடு அதைக் கேட்டு, உள்ளத்தில் ஏற்று, அதன்படி செயல்பட முன்வருவதில்லை என இந்த உவமை காட்டுகிறது. நல்ல நிலம் என்றால் என்ன? நம்மைத் தேடி வருகின்ற இறைவார்த்தையை நாம் ஏற்க முன்வர வேண்டும் (வழியோரப் பகுதி). இறைவார்த்தை நம்மில் ஆழமாக வேரூன்றி உறுதியாக நிலைக்க வேண்டும் (பாறைப் பகுதி). கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற உலகக் கவலை மற்றும் செல்வ மாயைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையைக் காத்திட வேண்டும் (முட்செடிப் பகுதி). இவ்வாறு செயல்படுவோர் பண்பட்ட, நல்ல நிலமாக இருந்து இறைவார்த்தை என்னும் விதையைத் தம்முள் ஏற்பார்கள்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 25/07/2024at 14:15
Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
25/07/2024:வெள்ளி
நற்செய்தி வாசகம்: ———————————
« உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் »என்று கூறினார்.
(புனித மத்:20:27-28)
சிந்தனைக்கு:
——————————
”ஆன்மீகம்.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
இவர் பெரிய யாக்கோபு என்றும் சந்தியாகப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த
செபதேயு, சலோமி ஆகியோரின்
மகன்.
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும் என அதிகமாக ஆசைப்படுகின்றனர். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் செலவழிக்கின்றனர். செலவழித்த பின் அமைதியின்றி, ஆனந்தமின்றி அலைகின்றனர்.
« ஆன்மீகத்தில் »செல்வ செழிப்புமிக்கவரான இவர் தன்னோடு இருந்த மக்களுக்கு ஆன்மீக செல்வத்தை பகிர்ந்தார். அவர்களும் கிறிஸ்துவின் செல்வச் செழிப்பில் பங்கேற்க வழியமைத்துக் கொடுத்தார்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
கேள்வி வாரம் 431 25.07.2024
1.சீனாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓய்வூதிய வயது என்ன?
2.பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக எத்தனைபேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது?
3.எந்த நாட்டில் மசூதிக்கு ஈரான் தடைவிதித்தது?
வணக்கம்….தடைகளைத் தாண்டியும்வெற்றிநடை போடும்
பாமுகம் தங்குதடையின்றி வீறுநடை போட வாழ்த்துக்கள்.
அரும்பணியாற்றும் அதிபருக்கும் வாணி மோகனுக்கும் மிக்க நன்றி.படைப்புக்கள் யாவும் பல்கிப் பெருகட்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
David Anthony Says: 24/07/2024at 21:20
Wednesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
24/07/2024: « புதன்
நற்செய்தி வாசகம்: —————————
“இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.
(புனித மத்:13:8,9)
சிந்தனைக்கு:
——————————
“நிலத்தின் பலன்.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
வாழ்வின் வெற்றிக்கு எது சரியான வழி? என்பதற்கான உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். விதைப்பவர் நிலத்தில் அறுபது மடங்கு மற்றும் நூறு மடங்கு பலன் கொடுக்கும் நிலத்தைப் பார்ப்போம். அங்கே விழுந்த விதைகளை, அந்த «நிலமானது »தனக்குள்ளாக ஏற்றுக்கொள்கிறது. தனது முழு ஆற்றலையும், சக்தியையும், அந்த விதை வளர்வதற்கு கொடுக்கிறது. எப்படியும் அந்த விதை, அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும் என்று தன்னையே அந்த நிலம் தியாகமாகக் கொடுக்கிறது. நமது உள்ளம் அப்படிப்பட்ட அந்த நிலமாக இருக்க வேண்டும். பல நல்ல சிந்தனைகள் நமக்குள்ளாக விதைக்கப்படுகிறது. அது எங்கிருந்து வந்தாலும், திறந்த உள்ளத்தோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறபோது, அது நமக்குள்ளாக ஆழமாக வேரூன்ற தொடங்குகிறது.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன்
ஐயாவிடம் எனது கேள்வியினை கேட்டு பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி பாமுகம்ஒலிபரப்பு தொழில்நுட்ப்பத்தடங்கல் எல்லாம் விலகி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நிகழ வாழ்த்துக்கள்
உற்சாக வணக்கம்
தடங்கல் கடந்தும் தனித்துவம் மிளிர தொடரும் படைப்புக்கள், தொகுப்புக்கள் ஆர்வமுடன் இணைந்து தொகுப்புக்களையும், இணைநிகழ்வுகளையும் உற்சாகமாக தொகுத்தளிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். பாமுக பணிக்கும் இடைத்தொடர்பில் இயங்கிட வலுப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவன ஒத்துழைப்புச் சேவைக்கும்
நன்றிகள் பாராட்டுக்கள்.
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 534!!
1.பழமொழியில் ஒப்பிட்டுச் சொல்லும் ஒரு வார்த்தை.. ஒன்பது எழுத்துக்கள்?
2.ஒன்று நான்கு ஐந்து ..சேர இதனாலும் கோபம் கூடும்?
3.ஒன்று மூன்று சேர பழைய கால பாவனைப்பொருள் ..
எழுத்தைப் பொறிக்க
4.இறுதி இரண்டு சொற்கள் உணவுப்பொருள்..!!
ஏட்டுச்சுரக்காய்
ஏச்சு
ஏடு
காய்
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் !!
1.இது ஒரு கலை வடிவம்..!!
ஆறு எழுத்துச் சொல்!!
கரகாட்டம்
2.ஒன்று கடைசி
இரண்டும் சேர ஒரு வாத்தியக் கருவி!
3.ஒன்று நான்கு ஐந்து ஆறு சேர கிரகங்களோடு தொடர்பு கொண்ட
ஒன்று ?
இரண்டு மற்றும் கடைசி சேர ஒரு உறுப்பு?
மூன்று நான்கு ஐந்து ஆறு சேர கடுமையாய் நடப்பது ..
கரகாட்டம்
கடம்
கட்டம்
கரம்
காட்டம்
David Anthony Says:
22/07/2024 at 16:55
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
22/07/2024:திங்கள்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு மகதலா மரியாவிடம்!
“நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்.
(புனித யோவா:20:17-18)
சிந்தனைக்கு:
——————————
“ஆணாதிக்கம்.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
இயேசுவின் உயிர்ப்புக்கு நமக்கு மரிய மதலேனாளை ஒரு முக்கிய சாட்சியாகத் தருகின்றார் நற்செய்தியாளர்.
பொதுவாக யூத சமுதாயத்தில் ஒரு பெண்ணின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யூத சமுதாயம் ஆணாதிக்கச் சிந்தனை மிகுந்த சமுதாயம். பெண்களுக்கென்ற மிகுந்த கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட பிண்ணனியில் யோவான் நற்செய்தியாளர் பெண்ணாகிய மரிய மதலேனாளை இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாகத்தருவது வியப்பாக இருக்கின்றது.
நம் வாழ்வில் நாம் எவ்வளவுதான் உண்மையாக வாழ வேண்டும், நேர்மையாக விளங்க வேண்டும் என விரும்பினாலும், பல வேளைகளில் அவற்றில் தவறி விடுகின்றோம். இதில் கவனிக்கப்பட வேண்டியதும், திருத்தப்பட வேண்டியதும் என்னவெனில், அதற்கான பொறுப்பை நாம் ஏற்காமல் சூழ்நிலைகள் மீது பழிபோடுகின்றோம். எல்லாச்சூழ்நிலைகளிலும் உண்மையாக இருக்க இறையருள் வேண்டுவோம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
David Anthony Says: 21/07/2024at 18:15
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு பாராட்டும்”மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:16ம் வாரம்
21/07/2024: ஞாயிறு.
நற்செய்தி வாசகம்: —————————
“மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
(புனித லூக்கா:10;42,42)
சிந்தனைக்கு:
——————————
“நல்ல பங்கு.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே! மார்த்தாள், மரியாள், லாசர் இவர்களது வீடு, இவர்களின் சந்திப்பு மிகவும் உதவியது. பெற்றோர் இல்லாத அவர்களுக்கும் நோயுற்ற லாசருக்கும் உதவியது. பயணக்களைப்போடு வந்த இயேசுவை மார்த்தாள் பல்சுவை உணவுடன் உபசரித்தாள். மனச்சுமையோடு வந்த இயேசுவை அவர் பாதம் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டு,அவரது உணர்வைப் பகிர்ந்து,மன வேதனையைக் குறைத்தாள் மரியாள்! இருவரின் செயல்களும் சிறப்புடையதாயினும், மரியாவின் செயல் அவசியமானது, அவசரமானது, அந்த நேரத்திற்குரியது. எனவே இயேசு அவள்; செயலைப் பாராட்டுகின்றார். மற்றவர்களிடம் எங்கள் கவலைகளை சொல்லும்போது கிடைக்கும் ஆறுதல் ஒரு நிமிடத்தில் மறைந்து போகிறது. ஆனால் கடவுளிடம் நம் தோல்வி, வெற்றிகளை சொல்லும்போது ஆறுதலும், ஆசீர்வாதமும் கிடைப்பதோடு முழுமனநிறைவும் கிடைக்கின்றது.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:
19/07/2024 at 20:35
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு”பாராட்டும், மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:15ம் வாரம்
19/07/24. வெள்ளி.
நற்செய்தி:
———————
அக்காலத்தில் இயேசு கூறியது: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
(புனித மத்:12:7,8)
சிந்தனைக்கு:
——————————
“யதார்த்தம்.”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இயேசு தன்னுடைய சீடர்கள் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். அந்த கதிர்களை திருடி விற்று, இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பசிக்காக, தங்களின் பசியை ஆற்றுவதற்காக அந்த கதிர்களைப் பறிக்கின்றார்கள். இங்கே இயேசு தன்னுடைய சீடர்களின் உள்மனதை அறிந்தவராக, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்காக வாதாடுகின்றார். யார் சரி? என்பதைக்காட்டிலும், எது சரி? என்பதை அடித்தளமாகக் கொண்டு வாதாடுகின்றார். இன்றைக்கு, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்காக நீதி, நியாயம் விற்கப்படுகின்றது.
எப்படி இந்த முரண்பட்ட சமுதாயத்தைச் சீர்திருத்தப் போகிறோம்? சிந்திப்போம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்விக் கணைகள் (558 புள்ளிகள் (.19.07.2024)
ஜெயா நடேசன் 266
பத்மினி கமலகாந்தன் 247
நகுலவதி தில்லைத்தேவன்216
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 162
வாணி நடாமோகன்259
சறோஜினி சோதிராஜா 254
நேவிஸ் பிலிப்ஸ் 191
ஜெசி மணிவண்ணன் 249
ராஜினி அல்போன்ஸ்- 254
லோஜினி முகுந்தன் 235
ராதிகா ஜங்கரன் 115
இரட்னேஸ்வரி மனோகரன் 05
சாந்தினி துரையரங்கன் 05
வஜிதா முகமட்33
நகுலா சிவநாதன் 46
ஜெயமலர் ஜெயம்130
தர்ஜினி சன்முகநாதன் 66
பத்மலோஜினி திரு 14
ஜெனி 05
நகுல் 25
அபிராமி 34
ஆதவன் 10
நடாமோகன் 06
உமா காண்டீபன் 05
கேள்வி வாரம் 430
1.ஐந்துநட்சத்திர விடுதியில் தேநீர் அருந்தியர்கள் பலியான சம்பவம் எங்கு இடம்பெற்றது?
2.குரங்கம்மை நோய் அதிகரித்துள்ள மாகாணம் எது?
நாளை கேள்விக்கணைzoom ல் நடைபெறும்
01-தாய்லாந்து-
02-ஒன்ராறியோ -(கனடா)
03-சுவிஸ்
கேள்வி வாரம் 430
பத்மினி -கமலகாந்தன் 131
சறோஜினி-சோதிராஜா 125
ஜெயா-நடேசன் 95
பத்மலோஜினி-திரு 66
திக்கம் நடா 22
ராஜினி அல்போன்ஸ் 136`
லோஜினி – முகுந்தன் 78
.கீத்தா பரமானந்தன் 07
நகுலவதி தில்லைத்தேவன் 48
நகுலா சிவநாதன் 04
உமா காண்டீபன் 05
ஜெசி மணிவண்ணன் 08
David Anthony Says:
17/07/2024 at 18:35
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள் நட்பு”பாராட்டும், மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:15ம் வாரம்
17/07/24.புதன்.
நற்செய்தி:
———————
அக்காலத்தில் இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என்றார்.
(புனித மத்:11:25-26)
சிந்தனைக்கு:
——————————
“ஞானிகள்.
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கின்றார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மமதையாக
மேலோங்கியிருக்கின்றது.
ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கின்றார்களோ, அவர்கள் தான் ஞானிகள்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says;16/07/2021 at 21:00,Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,”நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான மாதத்தில்…….
இறைவன் குரலில்:
16/07/21:பொதுக்காலம் 15ம்வாரம் செவ்வாய்,
நற்செய்தி வாசகம்:
——————————-
« தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். »
( புனித மத்:11;24)
சிந்தனை துளிகள்:
———————————-
“துன்பத்தின்பலன்.”
———————————-
என் அன்புச் சகோதர சகோதரிகளே!
துன்பம் தான், நமக்கு பல வாழ்க்கை அனுபவப்பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றது. துன்பத்தில் எப்போதும் எதிர்மறையாக எண்ணாமல், அதிலிருந்து கற்றுக்கொள்ளக்
கூடியவை எவை? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். அப்படி கற்றுக்கொள்வது, நமது வாழ்வை மாற்றக்கூடிய அனுபவமாக இருக்கும். வல்ல செயல்கள், அருட்கொடைகள். வாழ்வின் நலன்கள் கடவுள் நமக்குத் தரும் நல்ல வாய்ப்புக்கள். அது போல, இன்றைய நம் வாழ்விலும் கடவுள் தரும் கொடைகள்,செல்வங்கள்
அறிவுரைகள்,அருளுரைகள், அன்றாட அதிசய நிகழ்வுகள் ஆகியவை இன்று நமக்கும், நம் ஊருக்கும், நகருக்கும், நாட்டுக்கும், இறைவன் கொடுக்கும் வாய்ப்புக்கள். இவற்றைப் பயன்படுத்தத்தவறினால், எச்சரிக்கை நமக்கும்தான்.
இந்த நகரங்கள் ஊர்கள் பெயர்கள்தான் உள்ளன என்று எண்ணாதே! உன் ஊர், நகர், நாடு இந்த வரிசைப்பட்டியலில் வராது பார்த்துக்கொள்.கொரோனா உலகம்
முழுவதையும் பாதித்திருக்கின்றது என்பதை நினைவில் கொள்வோம். ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)
தொடரும்………
உற்சாக வணக்கம்
தொடரும் zoom நிகழ்வுகளுக்கும்
தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். பாமுகச்சிறப்பு கெளரவப்படுத்தல், pmp அரங்குகள் கண்ட சிறப்புகளுக்கும் பாராட்டுக்கள்.
பிறந்தநாள் மகிழ்வில் வாழ்த்துக்கள் இணைத்த அனைவருக்கும் அன்புமிகு நன்றிகள்.
தொடரும் நிகழ்வுகளும், நாளை வலுப்படுத்தலுடன் மிளிரும் பாமுகச் சேவைக்கும் வாணி மோகன் அவர்களின் தொடர்பணிக்கும் மிக்க மிக்க நன்றிகள்.
“ஆண்டுகள் தொடர்பணி
அங்கீகார விழுமிய வழி
தாங்கிய சுமைகளின்
தகுந்தநிலை மகுடம்
பிரகாச ஒளிர்வுடன் நிமிர்க மகிழ்க ” வாழ்த்துக்கள். நன்றி
இனியகாலை வணக்கம் திருமதி வாணிமோகன் இராமநாதகுருக்கள்ஐயா
பெண் நட்சத்திரம் கேட்டை இராசி விருட்சிகம்
ஆண் நட்சத்திரம் சித்திரை
இராசி கன்னி
இருவருக்கும் வருகிற வருடம் 2025 ஆண்டு வைகாசிமாதம் ஆங்கில திகதி யின்படி
16.05 2025 வெள்ளிக்கிழமை
29.05.2025 வியாழக்கிழமை
எந்த நாள் திருமணம்செய்வதற்க்கு நல்லநாள் என்று பார்த்து சொல்லமுடியுமா?
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்புடன்அமைய வாழ்த்துகள்.
David Anthony Says: 14/07/2024 at 19:40
Sunday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:15ம் வாரம்
14/07/2024
நற்செய்தி வாசகம்: —————————- « அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் »என்றார்.
(புனித மாற்:6:1,12,13)
சிந்தனைக்கு:
——————————
“விருந்தோம்பல்”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! மத்திய கிழக்குப்பகுதிகளில் “விருந்தோம்பல்”இறைப்பணியாகக் கருதப்பட்டது. புதியவர் ஒருவர் ஊருக்குள் நுழைகின்றபோது, தனது தேவைக்காக மற்றவர் உதவியை அவர் எதிர்பார்க்கத் தேவையில்லை. மாறாக, அந்த ஊரில் உள்ளவர்களே அவரை வரவேற்று, உபசரித்து அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பார்கள். இந்த பிண்ணனியில்தான், இயேசுவின் இன்றைய போதனை அமைத்திருக்கின்றது.
ஏனெனில், யூதர்களுக்கு மற்ற நாடுகள் தூய்மையற்ற நாடுகள். பாலஸ்தீனத்திற்கு வெளியே பயணம் செய்துவிட்டு, யூதர் ஒருவர் நாடு திரும்புகின்றபோது, தங்களின் கால்களில் படிந்துள்ள தூசியை உதறித்தள்ளிவிட்டு தான், நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்பது யூத ராபிக்களின் அறிவுரையாகும்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:
13/07/2024 at 21:15
Saturday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
13/07/2024:சனி
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.” என்றார்.
(புனித மத்தேயு:10:33)
சிந்தனைக்கு:
——————————
“பராமரிப்பு.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கின்றது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கின்றபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கின்றோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கின்றவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கின்றவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோம்.
வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கின்றோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கின்றோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகின்றோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கின்றோம். கடவுளின் ஆழமான அன்பு எப்போதும் நமக்கு உண்டு. நாம் ஒருநிமிடம் கூட சோர்ந்து போகக்கூடாது. அவர் நம்மோடு இருக்கின்றார் என்கிற அந்த நம்பிக்கை, வாழ்வில் துணிவோடு, மகிழ்வோடு நாம் இருக்க நமக்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says:
12/07/2024 at 12:15
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
12/07/2024: வெள்ளி
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:
மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”என்றார்.
(புனித மத்தேயு: 10:23)
சிந்தனைக்கு:
——————————
“பணியாளர்கள்.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கின்றார். நற்செய்தியை முழக்கமிட்டு அறிவிக்கும்போது, பேசுவது நாம் அல்ல தந்தையின் ஆவியாரே. பேசும் பொருளும் நம்முடையது அல்ல . பேசும் முறையும் நமது அல்ல . என்ன பேசுவது எப்படி பேசுவது என கவலை வேண்டாம். என்ன பேச வேண்டும்,; எப்படி பேசவேண்டும் என்பது அந்நேரத்தில் அருளப்படும். நற்செய்திப்பணியாளர்கள் இறைவனின் பணியாளார்கள். இறைபணிகளுக்கும் பணியாளர்களுக்கும் துன்பங்கள் தடைகள்; தடங்கல்கள் கொடுக்கும் போதெல்லாம் இறைவனோடு போராடுகிறோம்.
இறைவனோடு போராடி வென்ற மனிதன் இல்லை, அழிந்தவர்கள் ஏராளம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
David Anthony Says: 11/07/2024at 20:30
Thursday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
“நண்பர்கள்நட்பு”
பாராட்டும், மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
11/07/2024: வியாழன்.
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று « விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். »என்றார்.
(புனித மத்தேயு: 10: 7-8)
சிந்தனைக்கு:
——————————
“நற் செய்தி.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! ஒவ்வொரு நாளும் காலையில் நாம் சந்திக்க ஒவ்வொருவருக்கும் ஆசியை, வணக்கத்தை, அமைதியை ஆசி மொழியாகச் சொன்னால் என்ன? அது ஒரு நற்செய்தி அறிவிப்பன்றோ! பிறர் செவி மடுத்தாலும், இல்லாவிட்டாலும் பிறரை வாழத்துவோம். அந்த வாழ்த்துக்கும், ஆசிக்கும் அவர்கள் தகுதி உடையவர்களாய் இருந்தால், அது அவர்களிடம் தங்கும். இல்லாவிட்டால், நம்மிடமே திரும்பி வரட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் வாழ்த்துவோம், அனைவருக்கும் ஆசி வழங்குவோம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
கேள்வி வாரம் 429 11.07.2024
1.மிகவும் ஆபத்தான விமானப்பாதைகள் எது?
2.நிலம் வாங்குவது கஷ்டமான முதல் இருநாடு எவை?
3.தம்குட்டிகளை குழந்தைபோல் கண்காணிக்கும் மூன்று விலங்குகள்?
1. Santiago- Santa Cruz, Kazakastan– Allipetti, Lanzoo– China, Milan– Geneva, Japan, 2. Hong Kong — China, Sydney — Australia. – 3. Orangutan , Elphants, Dolphin, Aligator.
கேள்வி வாரம் 429
பத்மினி -கமலகாந்தன் 126
சறோஜினி-சோதிராஜா 121 ஜெயா-நடேசன் 92
பத்மலோஜினி-திரு 66
திக்கம் நடா 22
ராஜினி அல்போன்ஸ் 133`லோஜினி – முகுந்தன் 78
.கீத்தா பரமானந்தன் 07
நகுலவதி தில்லைத்தேவன் 45
நகுலா சிவநாதன் 04
உமா காண்டீபன் 05
ஜெசி மணிவண்ணன் 08
புலர்ந்த பொழுது உற்சாகமூட்ட
பாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.
தடைகள் தகர
தொடரும் நிகழ்ச்சிகளை ஆவலோடு எதிர்பார்த்படி
அனைத்தும் நலமேயாக இறை ஆசீர் வேண்டி வாழ்த்துகின்றேன்.
David Anthony Says: 10/07/2024at 17:30
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
« நண்பர்கள் நட்பு பாராட்டும் »
மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
10/07/2024: புதன்.
நற்செய்தி வாசகம்: —————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து
“பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது “விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”எனப் பறைசாற்றுங்கள்.”
என்றார்.
(புனித மத்தேயு:10:1;5-7)
சிந்தனைக்கு:
——————————
“இயல்பு”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்புகின்றார்?மக்களுக்கு கடவுளின் ஆசீரும், அருளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனுப்புகின்றார்.
இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் “இயல்பு”மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர். நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரை
குத்தப்பட்டவர். அதேபோல்,தீவிரவாதி என அறியப்பட்ட சீமோன். நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கின்ற தீவிரவாதி. நாம் அனைவருமே மற்றவர்களுக்கு கடவுளின் அன்பு, அருள், ஆசீர், இரக்கம், மன்னிப்பு அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மக்களை முழுமையாக கடவுளிடம் கொண்டுவர, எல்லாவித உதவிகளையும் முழுமையாகச் செய்ய வேண்டும்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன்
இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
மறு ஒலிபரப்பு கேட்கிறேன்
நன்றி
David Anthony Says: 09/07/2024at 12:36
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
« நண்பர்கள் நட்பு பாராட்டும் »
மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
09/07/2024: செவ்வாய்
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்”
என்றார்.
(புனித மத்தேயு:9;37,38)
சிந்தனைக்கு:
——————————
“அறுவடை.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! இயேசு திரளான மக்களைக் கண்டபோது அவர்கள் “ஆயனில்லா ஆடுகள்” போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டதைப் பார்த்துப் பரிவு கொண்டார் என்று நற்செய்தி கூறுகின்றது. ஒவ்வொரு குருவின் கடமையும், பணியும் இதுதான்.
மக்களின் பிற எல்லாத் தேவைகளையும் குறைகளையும் விட ஆயனில்லா ஆடுகள் போல் இருந்தது தான் மிகப்பெரும் குறை என்பது இயேசுவின் கணிப்பு. நல்ல ஆயர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் நம்மிடையே உருவாவார்களாயின், பாதிக்கப்பட்டோரின் கூட்டம் குறையும்.
இந்தப் பரிவின் பணியைச் செய்வதற்கு அதிகமான வேலையாள்கள் தேவை. எனவே, “அறுவடை”யின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்ற இயேசுவின் அழைப்பிற்கேற்ப இறையழைத்தலுக்காகவும் நாம் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய காலை வணக்கம் திருமதிவாணிமோகன் நேற்றையதினம் பிறந்தநாளைக்கொண்டாடிய பாமுக அதிபர் இயக்குனர் திரு நடாமோகன் அவர்களுக்கு எங்களுடைய அன்பான வாழ்த்தினை இறைஆசியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் இன்றைய பாமுகநிகழ்வுகள் யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
மேலும் நேற்றைய தினம் ஆன்மீகபால நிகழ்விற்க்கு ஒரு வினா ஐயாவிடம் கேட்டு எழுதியிருந்தேன் மறு ஒலிபரப்பில் தான் கேட்டேன் பதில் வரவில்லை போல் உள்ளது உறவுகளின்கருத்து பக்கத்தில் போட்டிருந்தேன் அடுத்த திங்கள் வாசிப்பீங்களா?
மிகவும் நன்றி
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் !!
1.இது ஒரு கலை வடிவம்..!!
ஆறு எழுத்துச் சொல்!!
2.ஒன்று கடைசி
இரண்டும் சேர ஒரு வாத்தியக் கருவி!
3.ஒன்று நான்கு ஐந்து ஆறு சேர கிரகங்களோடு தொடர்பு கொண்ட மங்கை!!
ஒன்று இரண்டு மற்றும் கடைசி சேர ஒரு உறுப்பு?
மூன்று நான்கு ஐந்து ஆறு சேர கடுமையாய் நடப்பது ..
கரகாட்டம்
கடம்
கட்டம்
கரம்
காட்டம்
பிறந்த நாள் வாழ்த்து:
———————————
அன்பு தம்பி திரு.நடா மோகன்
அவர்கட்கு!
எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இறைவன் உற்சாகம்,உடல், உள,ஆன்ம, சுகங்களோடு இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
டேவிட் அண்ணன்.
(பிரான்ஸ்)
David Anthony Says: 08/07/2024at 20:36
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
நண்பர்கள் நட்பு பாராட்டும்
மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:14ம் வாரம்
08/07/2024: திங்கள்.
நற்செய்தி வாசகம்: —————————
அப்பெண், « நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று »என்றார்.(புனித மத்தேயு:9;21,22)
சிந்தனைக்கு:
——————————
“வல்லமை.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே! லேவியர் 15: 25 – 27 ல் “பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப்படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக, இரத்தப்போக்குடைய பெண் தீட்டுள்ளவளாகக் கருதப்பட்டாள். அவள் தொட்ட அனைத்தும் தீட்டானதாகக் கருதப்பட்டது.
அந்தப்பெண் வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். மக்களோடு மக்களாக அவள் செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தோடு இயேசு சென்றபோது, அவரது ஆடையை தொடுகின்றாள் நலம் பெறுகின்றாள்.ஏனென்றால், என்னென்ன மருத்துவம் பார்க்க முடியுமோ, அவையனைத்தையும் அவள் பார்;த்திருந்தாள். இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் அவளுக்கு இயேசுவிடமிருந்து “வல்லமை”கிடைக்கிறது.
குணமடைந்தாள்.
ஆகவே,இறைவா!உமக்கே புகழ்!உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய வணக்கம்.
இன்று மலர்ந்திருக்கும் புதிய ,அகவையில் அகமகிழ்ந்திருக்கும் , இலண்டன் தமிழ் வானொலி, பாமுக அதிபர் திரு. நடாமோகன் அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன் முகத்துடன் சிறுவர்முதல் , பெரியவர்வரை உற்சாகம் கொடுத்து, ஊக்கப்படுத்தும் உயர்ந்த உள்ளம் நீடூழி வாழ்க வளர்க உயர்க என பிறந்தநன்நாளில் மனமாரவாழ்த்துகின்றோம்.
அன்பான திரு. திருமதி. மனோகரன் குடும்பமாக..
உற்சாக வணக்கம்
பாமுக அதிபர் நடாமோகன் அண்ணா அகவை உயர்வில் அகமகிழும் வேளை
ஆற்றும் பணிகள் அளப்பெரிதாய்
ஊட்டும் பன்மொழி ஆற்றல் அடுத்த தலைமுறை விருட்சமாய்
முதன்மை எத்தனங்கள் முதலொலியாய் வளர்க்கவே!
வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் கோடி வாழாத்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு.
மிக்கநன்றி
இன்றைய மோகன் மாமா பொன்சர் இணைவில் அட்சரன்
அச்சுதன் இராமதாஸ். நன்றிகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு நடா மோகன் அலர்களுக்கு ,,வான்உ டல்உள்ள உற்சாகத்துடன் உறுதி உள்ள மனதுடனும் ஊக்கமூட்டி வளரத்தெடுக்கும் பண்புடனும்்
வளமுடன் வாழ்க இறை ஆசீர் கூடி வர வாழ்த்துகின்றேன்
உற்சாகமான காலை வணக்கம்…எங்கள் பாமுகத்து அதிபருக்கு மகிழ்வான நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னுமாக இன்னுமாக பல்லாயிரம் பல்லாயிரம் உறவுகளை மேம்படுத்த உன்னதர்களாக்கி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு….தெய்வங்களின்
ஆசிகள் நிறைந்திடட்டும்…
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் இராமநாதகுருக்கள்ஐயா கடந்தகிழமை நான் கேட்டிருந்த கேள்வியின்படி 2025 ம் ஆண்டு வைகாசி மாதம் திருமணம் செய்யலாம் என்று சொல்லி இருந்தீர்கள் எனவே வருகிறவருடம் வைகாசிமாதம் திருமணம் செய்து வைக்ககூடிய நல்லநாள் எடுத்து தருவீங்களா?
பெண் கேட்டை நட்ச்சத்திரம் விருச்சிக இராசி
ஆண் சித்திரை நட்சத்திரம் கன்னிஇராசி
வியாளன்
வெள்ளி
ஞாயிறு
ஆகிய தினங்களில் பொருத்தமான ஏதாவது ஒரு தினம் பார்த்து தந்தால் மிகவும் நல்லது மிகவும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள்யாவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மறு ஒலிபரப்பில் நிகழ்ச்சிகள் கேட்பேன்
மிகவும் நன்றி
David Anthony Says:
07/07/2024at 19:05 Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி, « நண்பர்கள் நட்பு பாராட்டும் »மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி………
இறைவன் குரலில்:
07/07/24:பொதுக்காலம் 14ம் ஞாயிறு தினமாகும்.
நற்செய்தி வாசகம்:
——————————-
“இயேசு அவர்களை நோக்கி,
« சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப்பெறுவர்.
என்றார். »
( புனித மாற்கு:6;4)
சிந்தனை துளிகள்:
———————————
“இறை நம்பிக்கை.”
———————————
என் அன்புச் சகோதர சகோதரிகளே!
இன்றைய நற்செய்தியில்,இன்றைய வாசகம், இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது, அவரால் வல்ல செயல் எதையும் செய்ய முடியவில்லை. அதற்கான காரணம், இயேசுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாம்.
ஆம், எசேக்கியேல் போல, ஆண்டவர் இயேசு போல, ஓர் இறைவாக்கினர் நமது வீட்டிலே, நமது ஊரிலே, நமது பங்கிலே, நமது பணியிடத்திலே இருக்கலாம். சாதி, ஊர், ஏழ்மை, எளிய பணி, குறைந்த படிப்பு, பெண், வயதுக் குறைவு… எனப் பல காரணங்களை முன்னிறுத்தி அவர்களை இறைவாக்கினராக, உண்மையை அறிவிப்பவர்களாக, மனச்சான்றின் குரலாக, இறைநீதியின் பங்காளியாக நாம் ஏற்க மறுக்கலாம், பார்க்கத் தவறலாம்.
இன்றைய வாசகங்கள் நம் கண்களைத் திறக்கட்டும். நான் மட்டும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பரிசேயருடைய முன்சார்பு எண்ணம் நமக்குள்ளும் இருப்பதை நாம் உணர்ந்து அதைக்களைய முற்படுவோம். இறையாட்சிக்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்வோம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்வி வாரம் 428
1.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எங்கு நடைபெறுகிறது?
2.ஆனந்த் அம்பானி எத்தனைகோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் திருமணத்தில் அணிந்திருந்தார்?
3.சூயிங்கத்திற்க்கு இந்தவாரம் தடைவிதித்துள்ள நாடு எது?
1. கசகஸ்தான்
2. 6.91 கோடி
3. ஜெர்மனி
கேள்விக் கணைகள் (557) புள்ளிகள் (.05.07.2024)
ஜெயா நடேசன் 259
பத்மினி கமலகாந்தன் 239
நகுலவதி தில்லைத்தேவன் 216
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 162
வாணி நடாமோகன்251 சறோஜினி சோதிராஜா 254
நேவிஸ் பிலிப்ஸ் 182
ஜெசி மணிவண்ணன் 249
ராஜினி அல்போன்ஸ்- 243 லோஜினி முகுந்தன் 235
ராதிகா ஜங்கரன் 115
இரட்னேஸ்வரி மனோகரன் 05
சாந்தினி துரையரங்கன் 05
வஜிதா முகமட்33
நகுலா சிவநாதன் 46
ஜெயமலர் ஜெயம்121
தர்ஜினி சன்முகநாதன் 66
பத்மலோஜினி திரு 14
ஜெனி 05
நகுல் 15
அபிராமி 34
ஆதவன் 10
நடாமோகன் 06
உமா காண்டீபன் 05
David Anthony Says: 05/07/2024at 16:43
Friday அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
« நண்பர்கள் நட்பு பாராட்டும் »மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
05/07/2024: வெள்ளி
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு அவர்களை நோக்கி,நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. « பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன். »என்றார்.(புனித மத்தேயு:9;12,13)
சிந்தனைக்கு:
————————-
“சகோதர, சகோதரிகளே! எங்கே இயேசு, பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் விருந்து உண்கிறார்? யாருடைய வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது? லூக்கா நற்செய்தியாளர் இந்த விருந்து, மத்தேயுவின் வீட்டில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார். அழைத்தல்“ என்கிற வார்த்தைக்கான பொருளாக, விருந்தினர்களை இல்லத்திற்கு அழைப்பது என்பது பயன்படுத்தப்படுகிறது. இயேசு சொல்கிறார்: நீங்கள் விருந்தினர்களாக தற்புகழ்ச்சி உள்ளவர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் அழைக்கிறீர்கள். நானோ, தங்கள் குற்றங்களை நினைத்து வருந்துகிறவர்களையும், திருந்துவதற்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறவர்களையும் அழைக்கிறேன்.
இயேசுவை உண்மையாக நாம் தேட வேண்டும். உண்மையான உள்ளத்தை வெகுஎளிதாக இயேசு கண்டறிந்துவிடுகிறார். அவர் நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளை வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 04/07/2024at 20:15
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
04/07/2024: வியாழன்.
நற்செய்தி வாசகம்: —————————இயேசு,முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
(புனித மத்தேயு:9;6-8)
சிந்தனைக்கு:
————————-
“கடவுள் பயம்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே! நவீன உலகில் மனிதர்களின் கண்டுபிடிப்புகளும், வளர்ச்சியும், கடவுளைப் பற்றிய பயமே இல்லாமல், இந்த இளையதலைமுறையை பாழ்படுத்துகிறது. அதனுடைய வெளிப்பாடு தான், கொலைகளும், கொள்ளைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. மனநிம்மதி இல்லாமல், கவலை மனிதர்களை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றது. கடவுள் பயம் கொண்டு, வாழ்வில் மகிழ்வோடு வாழ்வோம்
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்வி வாரம் 428
1.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எங்கு நடைபெறுகிறது?
2.ஆனந்த் அம்பானி எத்தனைகோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் திருமணத்தில் அணிந்திருந்தார்?
3.சூயிங்கத்திற்க்கு இந்தவாரம் தடைவிதித்துள்ள நாடு எது?
.
David Anthony Says: 03/07/2024at 18:50
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
03/07/2024:புதன்.
*புனித தோமா – திருத்தூதர் விழா.*
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.
(புனிதயோவான்:
20:26;28)
சிந்தனைக்கு:
——————————
“கிறீஸ்தவ வாழ்வு.”
——————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்று நாம் திருத்தூதர் தோமையாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள்
உடன் வாழும் பேற்றினைப் பெற்றிருந்து இந்தப் புனிதரிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். கிறிஸ்தவ வாழ்வு என்பது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு அல்ல. அது மற்றவரோடு இணைந்த வாழ்வு. மற்றவர்களோடு ஒன்று சேர்ந்து வாழ்கின்ற வாழ்வு. துன்பமோ, கவலையோ, எதுவென்றாலும், நாம் மற்றவர்களோடு இணைந்து வாழக்கூடிய வாழ்வு. மனிதன் குடும்பமாக வாழ இறைவனால் அழைக்கப்பட்டிருக்கின்றான். அதுபோல கிறிஸ்தவன் சமூகமாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்றான். அவனது விசுவாசம் பிற மனிதர்களோடு உறவை உண்டாக்குகிறது. விசுவாசத்தில், இறைவனை அனைவரும் தந்தை என அழைப்பதால் நாம் அனைவரும் சமூகமாக வாழ வேண்டும் என்பது இறைத்திட்டம். ஆகவே விசுவாசம் என்பது பரந்து விரிந்த ஒரு வாழ்க்கை முறை. அதுவே கிறிஸ்தவம். அவனே கிறிஸ்தவன்(ள்). அத்தகைய வாழ்வை நாம் சிறப்பாக வாழ்வோம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மறு ஒலிபரப்பில் கேட்டுக்கொள்வேன்
நன்றி
David Anthony Says: 02/07/2024 at 20:30
Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,”நண்பர்கள் நட்பு பாராட்டும் மகத்தான மாதத்தில்”
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
02/07/2024: செவ்வாய்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு சீடர்களை நோக்கி:
”நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்கள் எல்லாரும்,
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர்.
(புனித மத்தேயு:8;26,27)
சிந்தனைக்கு:
————————-
“வீசும் புயல்.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
உதவி எனக்கு உன்னதத்திலிருந்து வரும் என்று உறுதியாக நம்பும் மனிதனுக்கு, கடவுள் தம்அருட்கரத்தை வானிலிருந்தும் நீட்டுவார். அண்டை அயலாரும் அத்தகையோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவர். எனவே அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் வீசும் புயல்கள் எளிதில் நீங்கும். கடல்கொந்தளிப்புகளும் விரைவில் அடங்கும். எனவே வாழ்வில் வீசும் புயல்கண்டுபேதலித்துவிட வேண்டாம். என்இயேசு என்னோடு இருக்கின்றார். என் அருகில்இருக்கின்றார். அவரது துணை எனக்கு கிடைக்கும்என்றதுணிவோடு எதிர்கொள்வோம். அணுகும்விதம்சரியானால் நல்லவை நடக்கும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டுபுது
வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய காலை வணக்கம்
காலையிலுருந்து நிகழ்வுகள் சிறப்பாக அமைந்தது .
சிறப்பாக இனைத்து எல்லோருக்கும்
சிறப்பு வாழ்த்துக்கள்.
வாணிக்கும் வாழ்த்துக்கள்
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் நேற்றைய தினம் ஆன்மீகபாலநிகழ்ச்சிகான பதில் மறு ஒலிபரப்பில் கேட்டேன் மிகவும் நன்றி அடுத்தகிழமையும் ஒரு கேள்வி உள்ளது அன்று எழுதிவிடுகிறேன் ஐயாவிடம் கேட்டு சொல்ல முடியுமா?
மிகவும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்
1.இலக்கியம் ஒன்று..ஏழெழெத்துச் சொல்?
2.முதல் மற்றும் கடைசி இரண்டும் சேர காலத்தை குறிக்கும் சொல்?!
4.ஒன்று இரண்டு மூன்று மற்றும் கடைசி சேர வாசனை எனப்பொருள் தரும்?
கந்தபுராணம்
கணம்
கந்தம்
David Anthony Says:
01/07/2024 at 11:40
Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி «நண்பர்கள் நட்பு » பாராட்டும்மகத்தான
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:13ம் வாரம்
01/07/2024: திங்கள்.
நற்செய்தி வாசகம்: —————————
“இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.(புனிதமத்:8;22)
சிந்தனைக்கு:
————————-
“நியதி.”
—————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நம்மில் பலர், கிறிஸ்தவம் என்பது ஒரு வகையான மதிப்புக்குரிய வாழ்க்கை என்று நினைக்கின்றோம். தன் தந்தையை அடக்கம் செய்து விட்டுவர அவன் அனுமதி கேட்டது, தாய் தந்தைக்குரிய கடமையை நிறைவேற்றும் செயலாகும்.எலியா இறை வாக்கினர், எலிசா இறைவாக்கினரை அழைத்தபோது, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார்.கடவுளை தேடிச்செல்லும் வேளை, நம் கடமைகளையும் செய்ய வேண்டும் என்பது இவ்வுலக வாழ்வின் “நியதி”.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)