சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு! பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்! பூர்வீகத் தமிழன் பெருஞ்செல்வம் புத்தகங்கள் அன்றோ அறிவீரே யார்அறிவார் கொடுமை நடக்குமென்று நேர்வழியைக் காட்டும் நல்லவர்கள் நெருப்பினாலே கொளுத்தி நாசமாக்க பார்வியக்கும் வகையில் புகையாக பாமரரும் கலங்கி நின்றனரே! சித்தர்கள் எழுத்தில் உருவான சிறப்பான ஓலை கள்சிதைந்து முத்தான சொத்து முத்தமிழில் முழுவதையும் எரித்து சாம்பரராக்கி இத்தரையில் தமிழர் இல்லாமல் ஒழித்திடவே ஓர்மம் கொண்டனரோ புத்தபிரான் வழியில் தோன்றல்கள் புதத்தியிலே மழுங்கிச் செய்தனரோ! […]

ஜெயம் தங்கராஜா

Kavi 654 பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் அழிந்தாலும் எழுந்தது மீண்டும் அறிவாலயம் பொசுக்கினாலும் பொலிவுடன் மீளமைந்தது பொக்கிஷம் பூப்பறித்திட பூக்களை பூத்தது பூஞ்சோலை தலைமுறையின் எதிர்காலம் தரணியில் தலைநிமிர்ந்தது செய்தது கொடுமை உலகமே அறியும் சர்வாதிகாரத்தின் முகத்தையும் முழுமைமாய் தெரியும் ஆண்டான் அடிமை ஆட்சியின் வெளிப்பாடு மண்ணெண்ணை தண்ணீர் என்கின்ற உறவோடு மகத்துவமான அறிவாளிகளின் படைப்புகள் தீயோடு தீயிட்ட பரம்பரையோ திரியுது தினாவெட்டோடு சிறுக சிறுக சேமித்தவைகள் சின்னாபின்னமானாலும் பழிவாங்கியோரையும் பார் பாரென மீளமைந்தது இதிலிருந்து […]

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 115 பொசுக்கிய. தீயும் பூத்திட்ட பொலிவும்” கால் பதித்த மண்ணில் கரைந்திட்ட நினைவுகள் பொசுக்கிய தீயில் பொசுங்கிய புத்தகங்கள் அறிவை அழித்திட ஆற்றிட்ட சதி ஆறுதல் தருவது புதிய கட்டிடங்களே! மீண்டிட்ட அறிவு கூடத்தில் அறிவை பெற்றிட அளந்த அளவிலேயே அறிவுப் புத்தகங்கள்! மீண்டிடாத மீள்பதிப்புகள் மிகுந்த மனவலிகள் பூத்திடாத பொலிவுகளே விகுதிகள்!! நேரில் பார்த்தவை! பூத்திட்ட பொலிவா?? எங்கே????….. க.குமரன் யேர்மனி

வசந்தா ஜெகதீசன்

பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்.. யாழ்நகர் மத்தியிலே வானுயர்ந்த கோபுரமாய் வற்றாத சுரங்கமாய் வரலாற்று நூலகமாய் வான்மதியாய் மின்னியது எண்ணற்ற தேட்டங்கள் எழுத்தாளர் படைப்புகள் ஏற்றத்தின் கல்விக்கு விளக்கான விருட்சமே பொறிக்குள் பொசுங்கியதே சாம்பல் மேடாகி சரித்திரத்தை புதைத்தது நாற்பத்திரண்டாண்டு தீயே உனக்குள் தீராதபசிச் சுவாலை வேரோடு தமிழினத்தை வீழ்த்திய விரக்தியே மறக்கத்தகுமா மனிதத்தின் கொடூரம் இனத்தையே உலுக்கியது ஈழமே அழுதது தேடற்கரிய தேட்டத்தை இழந்தோம் தேவையின் வலுவை திரட்டிய முனைந்தோம் அடம்பன் கொடியென திரள்வதே மிடுக்கு […]

கெங்கா ஸ்ரான்லி

பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் ——— தெற்காசியாவில் இரண்டாவது நூலகம் திக்கெட்டும் பேசப்பட்ட நூலகம் பலதுசையில் இருந்து பெறப்பட்ட நூல்கள் பொசுக்கப்பட்டதே பாவிகள் ஈனச்செயலல் தீயில் தமிழர்களின் அறிவின் ஆற்றல் கற்பதில் அவர்களது ஏற்றம் கண்டார்கள் பொறாமையின் தோற்றம் காடையர்கள் கண்டதிந்த மூர்க்கம் நீலிக் கண்ணீர் வடித்தோரும் உண்டு நீக்கமற வருந்தியவரும் கண்டு பாஸ்ரரும் பரிதாபமாக இறந்தது என்று பாவிகளின் கொடூரச் செயலே காரணம் என்று அழகான கட்டிடம் சான்றோரல் வடிவமைக்கப் பட்டு கட்டப்பட்டது அங்குதான் முத்தான […]

கெங்கா ஸ்ரான்லி

பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் ———/- தெற்காசியாவிலே இரண்டாவத்நூலகம் திக்கெட்டும் பேசப்பட்ட நூலகம் பலதிசையில்லிருந்து பெறப்பட்ட நூல்கள் பொசுக்கப் பட்டதே தீயினால்

நேவிஸ் பிலிப்

கவி இல (103) 25/05/23 பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் தமிழின கல்வியறிவின் ஆதாரம் தீ மூட்டி எரித்ததனால் சேதாரம் தமிழின அழிப்பின்அடையாளம் தீயில் பொசுங்கிய கருவூலம் மொழி அழிந்தால் இனமும் அழிந்திடும் என நினைத்த வெறியரின் கற்பனை சுக்குநூறாய் சிதற தமிழன் தலை நிமிர்ந்தான் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்போல வேண்டும் மீண்டும் நூலகமென அறிஞர்கள் கலைஞர்கள் பலத்தோடு ஆண்டுகள் நாற்பது கடக்க சாம்பலில் பூத்த மலரென புதுப் பொலிவுடன் நிமிருது பிரமிப்பாய் பிரமாண்டமாய் யாழ்பொது […]

ரஜனி அன்ரன்

“ பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் “…கவி..ரஜனி அன்ரன் (B.A)25.05.2023 அறிவுச் சுரங்கம் ஆசியாவின் பொக்கிஷம் அனலுக்குள் பொசுக்கி சாம்பல் மேடாக்கி ஆண்டுகள் நாற்பத்தியிரண்டும் ஆனதுவே மாறாத வடுவின் நீச்சமிது ஆறாத் துயரத்தின் உச்சமிது நீறாக்கிப் போட்டனரே நீசர்கள் ! நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்குள் நாலாவிதமான நிகழ்வுகளும் அரங்கேற கலவரங்கள் புலம்பெயர்வுகள் எனத் தொடர கண்டங்கள் ஐந்திலும் மக்களும் வாழ கரம் கொடுத்து பலரும் உதவ எரிந்த சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து நிமிர்ந்து நிற்குதே எழிலோடு புதுப்பொலிவோடு இன்றும் […]

நகுலா சிவநாதன்

பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் பொலிவாய் புதுமை தந்த நூலகமே பொழுதிலும் பூத்த அறிவுப் பெட்டகம் வலிந்து தீயோர் அழித்த கூடமே வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய் ஆசியா கண்ட அரும்பெரும்; நூலகம் தேசிய பரப்பினை நிறைத்திட்ட பெட்டகம் பல்லாயிரம் தமிழரை உயர்த்திய ஏணி பாருக்கே பெருமை தந்த தோணி தாயக மக்களின் கனவுச் சுரங்கம் தாராள அறிவினை ஊட்டிய மையம் பொசுக்கிய தீயில் மடிந்து மாண்டாலும் நசுக்கிய உள்ளங்கள் நலிந்தே சென்றதே! சாம்பலின் மேட்டில் சரித்திரம் […]

நகுலா சிவநாதன்

பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் பொலிவாய் புதுமை தந்த நூலகம் பொழுதிலும் நிறைத்த அறிவுப் பெட்டகம் வலிந்து தீயோர் அழித்த கூடம் வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய் ஆசியா கண்ட அருமபெரும்; நூலகம் தேசிய பரப்பினை நிறைத்திட்ட நாலகம் பல்லாயிரம் தமிழரை உயர்த்தய ஏணி பாருக்கே பெருமை தந்த தோணி தாயக மக்களின் கனவுச் சுரங்கம் தாராள அறிவினை ஊட்டிய மையம் பொசுக்கிய தீயில் மடிந்து மாண்டாலும் நசுக்கிய உள்ளங்கள் நலிந்தே சென்றதே! சாம்பலின் மேட்டில் சரித்திரம் […]