வியாழன் கவிதை

வேண்டாமே வன்மம் 691 05.12.2024

Selvi Nithianandan

வேண்டாமே வன்மம்

தினம்தோறும் நல்லெண்ணமும்
தித்திக்கும் சொற்பேச்சும்
திசைமாறிடும் ஒழுக்கழும்
தினசரி தீயாய் வலிக்குமே

பிணியில் வாடியபோதும்
அணைத்தெடுத்த உறவுகள்
வஞ்சித்து வார்த்தையால்
தள்ளிப்போகும் நண்பகுழாம்

பொறுமையாய் வலிகளை
தாங்கிய என் இதயமும்
உருக்குலையும் அகமும்
உருகிப்போன வெண்பனியாய்

வன்மமே வேண்டாமே
வாஞ்சையாய் நாமும்
வற்றாத ஊற்றுப்போல
வழிகாட்டியாய் இருப்போமே