வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ புகையே பகை “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.06.2023

சுற்றுச் சூழலை மாசாக்கி
சுற்றத்தாரையும் பாழாக்கி
புற்று நோய்க்கும் ஆளாக்கி
இதர உறுப்புக்களும் பாதிப்பாகி
புகையைக் குடிக்கும் மனிதா
உன் உயிரைக் குடிக்கிறதே புகை !

புகை பிடிப்பதைக் குறைக்க
புகைத்தல் பற்றிய விழிப்புணர்வை ஊட்ட
புவனத்தில் ஆண்டு தோறும் மே31இனை
புகையிலை எதிர்ப்பு தினமாக்கி
புத்தூக்கம் கொடுக்கிறதே உலக சுகாதார நிறுவனமும் !

ஆண்டு தோறும் இலட்சக் கணக்கில் மக்களும் இறப்பு
ஆயுளையும் குறைக்கிறது புகைக் குடிப்பு
புகையிலைக்குள் புதைந்திருக்கும் நிக்கொட்டின்
புதைத்து விடுகிறது புகைப்பவரையும்
புகைப்பவர் பக்கத்தில் இருப்போரையும்
புகையே உயிருக்குப் பகை !

புகைத்தலைப் பகையுங்கள்
புன்னகையோடு வாழலாம்
புகை-இலை உயிருக்குப் பகை-இலை
புகையே உயிருக்குப் பகை !