சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

விடுமுறை

கடுகதியென இயங்கிக் களைத்தவுடல்
கட்டையென இறுக்கி மருகுமுளம்
சுடுகாட்டை எட்ட விடலாமோ?
சுரணை கெட்டு வாழலாமோ?
எடுப்பில்லா வாழ்வில் ஏதுசுகம்
கடுப்பையே சூடும் நாளுமது
தடுத்திடவே வருகின்றது விடுமுறை
தந்திரமான துர்வாரலேயதன் பொறிமுறை

அனுபவிப்போம் நாமும் விடுமுறையை
அடுத்தவருக்கு ஆக்கினை செய்யாது

மனோகரி ஜெகதீஸ்வரன்.
(பதியவில்லை )