சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பாமுகமே வாழி

பார்ப்போரும் கேட்போரும்
பரவசம்! கொள்வாரே
படைப்போரும் பகிர்வோரும்
பரிணாமம்! அடைவாரே
பாமுகமே! உன் மலர்வாலே.

ஆற்றலும் ஆளுமையும்
அகன்றிடாது காத்துநின்ற
அரும்பணியை ஆற்றுகின்ற
பாமுகமே! போற்றி போற்றி.

தலைமுறைகள் தாண்டியுமே
தமிழ் பரம்பும் தம்பணியை
தளர்வின்றியே தொடர்ந்திடும்
பாமுகமே! போற்றி போற்றி.

இலைமறை காயாக
இருப்போரின் திறமைகளை
வெளிக்காட்டி ஒளிர்விக்கும்
பாமுகமே போற்றி போற்றி.

சந்தம் சிந்தும் சந்திப்பை
செவ்வனே ஆற்றுகின்ற
பாவையண்ணாவை தந்த
பாமுகமே! போற்றி போற்றி.