வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(105) 8/06/23
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
**********************************
பொதிகை மலைத் தென்றலிலே
பூத்தெழுந்த தமிழே
‘அ’ எழுத்தை வித்தாக்கி
தொகுத்தெடுத்த எழுத்துக்கள்

செந்தமிழ் சொற்றொடராய்
பாரெங்கும் பரவி வரும் தமிழ் மொழி
புலம் பெயர் சிறார்களால்
ஒத்திசையாய் இணைந்திருந்தே

பாமுகத்தில் தொடர்ந்து வர
எட்டுத்திக்கும் தமிழ்மணம்
கொட்டும் முரசொலியாய்
புவியெங்கும் முழங்கிடுதே

ஊக்கமாய் ஆக்கங்கள்
தேக்கம் காணா பிரளயமாய்
ஊற்றெடுத்து பெருகிடவே
சுதந்திர தமிழ் மணமெங்கும் கமழ்ந்திடுதே

அழிவில்லை யென்றும்
தாய் மொழியாம் தமிழுக்கே
அடுத்த தலைமுறைக்கும்
வளர்த்து வரும் பாமுகம்
வாழ்க வாழ்க என்றும் வாழவே,,!!!!!!
நன்றி வணக்கம்