சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்.

மாசி

மாசி பனியும்
மூசி பெய்யும்
தூசி வந்தும்
நாசி அடைக்கும்

மாசி மகமும்
மகிழ்வுற வரும்
நேசி அகமும்
தூய்மை பெறும்

மாசி வந்தால்
பெற்றவர் பிறப்பு
மனையிலே வந்திடும்
இணைவும் சிறப்பு

செல்வி நித்தியானந்தன்.