சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன்

பள்ளி பருவம்
………………..,…
பள்ளிப் பருவம்
துள்ளி ஓட்டம்
நண்பிகள் வட்டம்
நயமாய் ஆட்டம்

மாங்காய் புளியங்காய்
விளாங்காய் நாவலாய்
விரும்பி உண்ணலும்
விளையாட்டுவேட்டையில்

படிப்பில் போட்டியும்
நடிப்பில் காட்சியும்
பக்க துணைகளும்
பரவசம் கொண்டோமே.

செல்வி நித்தியாளந்தன்