சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_158

“பருவம்”
இளவேனில்
காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர்காலம்!

சூரியனை சுற்றி வரும்
பூமியின் சுழற்சி
சுழற்சியின்
சமதளம்
பூமி அச்சின்
சாய்வு
பருவ கால ஆய்வு!

பகலவன் வருகை
பகலுக்கு அழகு
பூக்களின் மலர்வு
பார்வைக்கு மகிழ்வு!

சூரியனின் ஒளிர்வு
கனிகளுக்கு
விருந்து
உடலுக்கு மருந்து!

தோலுக்கும்
தோள்பட்டைக்கும்
தோள் கொடுக்கும்
தோழனே
உன் வருகைக்காக காத்திருப்போம்
காவலனே
சேவகனே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
11.08.24