ஆறுதலே வானம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்பினிலே பாத்தி கட்டி அவசரமாக நடை பயின்றோம் //
இன்பமுடன் பேசியும் இகமதில் மகிழ்ந்தோம் நாமும்//
இனிமை பொங்கும் நாட்கள் எல்லாம் இருண்ட வானம் ஆகியதே//
வெள்ளை மனமும் உந்தனுக்கு கள்ள இன்றிக் கதைத்தாயே //
சொல்ல மறந்த கதைகள் எத்தனை சொல்லாது எங்கு போனாய் //
எப்படிச் சொல்வேன் எனதுயிரே கேட்பாய் //
செங்கதிராக என்னோடு ஒளிவீசியும் நடப்பாய் என்றே பெரும் கனவு //
காலம் போட்ட கோலம் என்னடா கவலையில் மூழ்கவும் விட்டதே //
வானத்து விண் மீனுக்கு வந்ததோ சோதனை//
சாதனை இன்றியே சுரம் எப்படி
அணைந்தும் போனதே
பட்டமரம் துளிர்க்குமா, பரிசமும் போடலாமா ஏலம் போட முடியுமா //
ஆறுதலே வானமா அணங்குவின் எண்ணமும் வீணா //
சிவருபன் சர்வேஸ்வரி