போரில்லா நல்லுலகம் வேண்டும்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
காணும் இன்பம் கனிந்திடும் எண்ணம் காசினியில் நிலவிடவும் //
வேணும் எங்கள் வேதனைகள் தீர்க்கும் தீதறியாத உலகமும் //
சூழும்கலிகள் சூழ்ச்சிகள் எல்லாம் மாறிடவும் வேண்டும் //
மனங்கள் குளிர்ந்து மானிலம் சிறந்து நடைபயில்வதுவும் நன்றே //
வேறுபட்ட எண்ணங்களாலே போர்தொடுத்து வெந்துமடிதல் வேண்டாம் //
உண்டு மகிழ்ந்து உலாவியும் வரவே தங்குதடைகள் உடையட்டுமே எங்கும் //
பொங்கும் மனதில் புதுமைகள் துள்ளவும் நின்றே நிலவுதல் தோற்றம்//
வஞ்சனை கொண்டு வீழ்த்தியும் விடாது இரங்கியும் காத்திடுவாயே //
ஏழைகள் என்று ஏளனம் செய்து வதைத்தலும் ஆகாது பாராய் //
கடுங்கோபம் கொண்டே கத்திகள் எடுத்து உயிரையும் வதைக்காதே //
இயற்கையின் படைப்பில் துரோகமில்லை இடர்களை விதைக்காதே //
வழுவாத குணமும் வாய்மையின் சிறப்பும்
வரமாகக் கொண்டுவிடு //
நஞ்சுவைத்துப் பழகும் மக்கள் மனங்களும் மாறிவிட்டால் //
அஞ்சியும் நடக்கத் தேவையும் இல்லை அகிலமும் பேரொளியே //
துஞ்சிநீயும் துவண்டிட வேண்டாம் எங்கள் மண்ணிதுவே //
போரில்லா உலகம் மாறியே வந்தால் என்றும் புதுமைதானே //
சிவருபன் சர்வேஸ்வரி