வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1820!

பெருமை நினதே!
புகழ்பூத்த கலையகம்
புலனுக்களித்த வரமாய்
காற்றோடு கலந்துமே
காற்றலையாய் முகிழ்த்து
ஆண்டுகள் இருபதொடு ஆறு
அழகென உதயம்!!

கல்லையும் சிலையென
ஆக்கிவைத்த பெருமை
காலத்தின் வேகத்தில்
கருவிழந்து போகாது
படைத்திட எனையும்
பாங்குடன் இணைத்தாய்
நன்றியே நாளும் நவில்வது
என்பணி!!

பணித்தாய் நீயும்
பலரையும் இணைக்க
அடுத்த தலைமுறை
தமிழொடு மிடுக்காய்
ஆளுமை நிறைக்க
விடுத்தாய் சேதி
ஆக்குவோம் நிலைப்போம்
வாழிய காற்றலை இணைந்த
பாமுகம் வாழிய வாழிய!!
சிவதர்சனி இராகவன்
31/5/2023