வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1806

உழைப்பே உன்னதம்!

பொருளே ஆதாரம் என்றெண்ணி நாளும்
பொழுதை நிறைத்து
பெருமை சேர்க்க
உழைப்பே உன்னதம்
உயர்வு உத்தமம் ஆகும்

காலை விடியல் கண்டு
மாலை மயக்கம் நீக்கி
மண்ணில் உயிர்ப்பு தேக்கி
மலரும் பொழுதை உயர்த்த
உன்னத ஆசான்
உயரிய விருதே உழைப்பு!

விருப்பு நாடிச் செய்யும்
வியர்வை நாளும் சிந்தும்
உவகை தருமே உழைப்பும்
களைப்பில் கனிவது வரவே
உழைக்கும் கரமே வாழ்க!
சிவதர்சனி இராகவன்
3/5/2023