சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி சிவரூபன்

அழகு
^^^^^^^^^

அழகே அழகு அமைதியான வாழ்வு
இகழ்வே இல்லாத இன்பத்தின் சிறப்பு

புகழ்வேன் நன்றாய் புதுமையும் பொங்கிட
மகிழ்வே கொண்டு மானிலம் செழிக்கவும்

அழகுக்கு அழகு சேர்ப்பதழகே
ஆனந்த வாழ்விலே இன்பம் கொள்வதும் அழகே

விரையம் இல்லாது விழுமியம்சேர்ப்பதழகு
விரைந்தே திறமைகளைக் காட்டுவதும் அழகு

பெரியவர் சிறியவர் என்றில்லாமல் பெருமை மிளிர நடப்பதழகு

பேராண்மை சிந்திடக் கள்ளான்மை
அகன்றிடக் காப்பதும் அழகு

வள்ளலாயிருந்து வாரியிறைப்பதும் அழகு

வரம்பு மீறாத இலட்சியக்கொள்கைகள் இருப்பதும் அழகு

அழகு அழகு என்றே அகத்தினில் தூய்மையும் இருப்பதுதான் அழகு

சர்வேஸ்வரி சிவருபன்