சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம்
**********
வண்ண வண்ணப்பூக்கள் பூக்கும்
வானுயர் சோலையாகும் தருக்கள் நிறைந்து
விண்ணகத்து இராஜா வீசிடும் ஒளிதனில்
வெற்று வாழ்க்கை
துளிர்க்கும் மீண்டும்!
விடியலைத் தேடி
படிதனைத் தாண்டி
மடிதனில் மழலையுடன்
குடிதனைக் காக்க
கடும்பணி புரிந்துமே வாழ்பவர் வாழ்விலும்
வசந்தம் வீசணுமே!
கனவுகள் பலிக்க
கடவுளும் இரங்க
காலமும் விரைவில்
மாறணுமே!
தாயகம் தன்னில்
நேயமும் கொண்ட
ஆட்சியும் வந்து
சூட்சிகள் இல்லா
சுகந்தமும் வீசணுமே!
நன்றி வணக்கம்!