வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு!
என் அப்பா!
அறுசீர் விருத்தம் – சீர் வரையறை: மா மா காய்/ மா மா காய்
குடும்பத் தூணாய் இருந்தாரே
குலம் விளங்க வாழ்ந்தாரே
துடுப்பு வலித்த தலைவரானார்
துயரம் எதுவும் கொள்ளவில்லை
கடுப்பு மிக்க ஆசானாய்
கண்டிப் புடனே கல்வியையும்
கொடுத்து மகிழ்ந்த ஆசிரியர்
கடமை கண்ணி யமாய்க்கொண்டே!
எடுத்த முயற்சி நிறைவுசெய்தார்
எல்லோர் மனமும் வாழ்த்தியதே
அடுத்த வருமே வாழ்ந்திடவே
ஆலை ஒன்றை நிர்வகித்தார்
உடுக்க உடைகள் நெய்தாரே
ஊரில் உள்ளோர் வியந்தாரே
எடுத்தார் முயற்சி இளமையிலே
எண்ணம் எல்லாம் வென்றாரே!
கடுமை உழைப்பை அவரிடமே
கற்றுக் கொள்ள நல்ஆசான்
நெடிய தூரம் வந்தேன்நான்
நேரே பார்க்க முடியவில்லை
கொடுமை செய்த பாவியானேன்
கொடிய கூற்றன் அழைத்தானே
அடுத்த பிறப்பில் அவருக்கே
ஆசை மகளாய்ப் பிறந்திடணும்!
அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக!

கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கும் திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி கூறி அனைத்து கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!