சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 230

தலையீடு

இறப்பு எப்படி நடந்தது?
இறந்தவர் யார்?
உறவு முறை என்ன?
யார் பொறுப்பு?
கேள்வி கொத்ததை
நிரப்பியவளுக்கு

உதவிகள் எங்காவது
பெறலாமா என்ற கேள்விக்கு
அனுதாபத்துடன் பதில் தந்தாள்

சவப்பெட்டி என்ன மாதிரியேன
கேள்வி வந்த போது
பார்வையிட்டவர்கள்
சப்புப் பலகை
ஊர் உலகம் ஏற்குமா?

எரிப்பதில் பெறுமதி
என்ன இருக்கின்றது
கேட்டவளுக்கு

அன்பைக் காட்ட
பெறுமதி தேவை!!..
தலையீட்டினால் தகர்ந்தது
அனுதாப அலைகள்!

தலையீடுகளால் தவிடுபொடியாகும்
காரியங்களில்
இதுவும் ஒன்று!!!!…….

க.குமரன்
யேர்மனி