வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 117
எழுத்தின் வித்தே பூத்தெழும். தமிழே

தாய் மொழி சொல்லி
பொருள் வகை காட்டி
உன் தேவை கூறி
உனது தேவை பெற்றிடும்

பரிவர்த்தனையில் உள்ளது
உன் பெற்றோர் மொழி
சேய்யதில் நீ பெற்று
போக்கும் அறியாமையேனும்
மடமைதனை

வாய் வழி மொழி தொடர
எழுத்து என உருபெற்றுது
நம் பாக்கியம்
கல் வழி வந்து

ஓலையில் நின்று
காகித்த்தில் பதிந்து
இன்று கண ணியில்
எழுத்துக்கள் பதிந்து

இன்னும் புதுமைகள்
பெற வைப்பாய்
புலத்தில் பூத்தெழுத
பூவே நீ !

க.குமரன்
யேர்மனி