சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 247

விடுமுறை

விடுமுறை ஒன்று
தா தாயீ
புள்ளைகளோடு ஒரு
நாள் சேர்ந்து இருக்க
சனி ஞாயிறாக
தா தாயீ

சனியும் ஞாயிறும்
எனக்கு சொந்தம்
தருவது எப்படி
உனக்கு மட்டும்?

திங்கள் முதல்
வெள்ளி வரையில்
நாள் ஒன்னு கேளு
தருவேன் உனக்கு

தனித்து விடுமுறை
நான் எடுத்து
தனித்து வீட்டில்
இருப்பதும் ஏனோ?

சகலரும் கூடி
சந்தோசமா
எனக்கு ஒரு
விடுமுறை நாள்
தா தாயீ!

அடுக்களை பாத்திரம்
கூடும் நாளும்
ஆடைகள் குவியலை.
துவைக்கும் நாளும்
ஆகாதே உனக்கு
விடுமுறை தரவே !

வேண்டாத ஆசை
உனக்கு வந்தால்
வேலையை விட்டு
போவதே சாத்தியம்

போட்டாள் ஒரு போடு
பானையை!
பொத்தடி.வாயை
என்று !!!!

க.குமரன்