சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

பருவம்
————
பருவங்கள் பலவகை
இயற்கையின் பருவம்
உடலின் பருவம்
மனதின் பருவம்
காலங்களின் பருவங்கள் மாறும்
உடல்களின் பருவங்கள் மாறும்
சிசு மழலை, குழந்தை, யெளவனம்,
கன்னி, காளை, , இளையோர்
வயதுப் பரிமாணம்
இது இறைவனின் படைப்பின்
விசித்திரம்
பருவக் கோளாறு
பலதையும் செய்யும்
வருவது பற்றி
சிந்திக்காமல் செய்யும்
கருவிலிருந்து வெளிவந்து
முதிரும் வரை
மளமளவெனப் பருவ மாற்றங்கள்
இயற்கையின் பருவக்காற்று
தென்மேற்றகு பருவக் காற்று
வடமேற்கு பருவக்காற்று
காற்றின் பருவங்களும்
மனித வாழ்வுக்கு தேவையே
இந்தப் பருவங்களுக்குள்
நாமும் இணைந்துள்ளோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி