சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

வசந்தம்
தென்றல் வீசவர தெம்மாங்கு பாடிவர
தளிரும் துளிர்த்து தாவரங்கள் பசமைதர
அன்பின் ஊற்றாய் அன்றில்கள் இசைபாட
அசைதாடும் மணம்கமழும் அல்லிகளும் அழகாய்
இன்பம் பொங்கிட இல்லம் சிறந்திட
இரவும் குறைந்து இதமான பகல்வர
உன்னதமாய் உயிரினங்கள் உலா வரவும்
உதித்திடுவான் சூரியனும் உகவை பொங்க

வாழ்வினில் வசந்தம் வந்திடும் போது
வறுமையும் அகன்று வளமும் பெருகும்
தாழ்வும் அகன்று தரமும் உயந்து
தங்கமாய் மனமும் தண்ணொளி யாகும்
ஊழ்வினை அகன்று ஒளியும் பிறக்கும்
ஒற்றுமை வாழ்வில் ஒன்றியே சேரும்
பாழ்படா வாழ்வும் பற்றும் ஓங்கவே
பாசமும் நேசமும் பரவச வசந்தமே

கமலா ஜெயபாலன்