வியாழன் கவிதை

இ உருத்திரேஸ்வரன் Swiss.

வெறுமை போக்கும் பசுமை..!
கவிதை 195

கட்டாந்தரையை பசுமை ஆக்கும்
சிற்பியான உழவன் வாழ்வில்
வெறுமை நீங்கி பசுமை மேலோங்க
வியர்வை சிந்தும் உழைப்பே

தருக்கள் நட்டு புவனத்தை பசுமையாக்க
புவனமோ குளிர்மையடைந்திட
உணவுப் பஞ்சம் மறைந்திட
எல்லோரும் மகிழ்வுடன் வாழ்வோமே

வெறுமை நிலத்தை பார்த்த கண்கள்
பசுமை நிலத்தை பார்த்திட
மனமும் மகிழ்வில் மிதக்க
பிறக்குமே மெய்யில் உற்சாகம்

– இ உருத்திரேஸ்வரன்
Swiss.